விவசாயிகளின் கூலிக்கு கூட தேறவில்லை; தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை

விவசாயிகளின் கூலிக்கு கூட தேறவில்லை; தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை

Published : Mar 29, 2023, 08:20 PM ISTUpdated : Mar 29, 2023, 08:21 PM IST

தக்காளி ஒரு கிலோ ரூ.3க்கு விற்பனையாவதால் வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு கூட வருமானம் இல்லை என்று கூறி தக்காளியை பெரும்பாலான விசாயிகள் சாலையில் கொட்டி அழித்து வருகின்றனர்.

உடுமலைப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு காய்கறிகள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம் சாகுபடியில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதிகளில் விளையும் காய்கறிகள் விற்பனைக்காக தினசரி சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன.

அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தநிலையில் தக்காளி சாகுபடி பெரும்பாலான விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி உற்பத்தி அதிகரிக்கும் காலங்களில் பெரும் விலை சரிவு ஏற்படுகிறது. 

விலை உயர்வு ஏற்படும்போது மாற்று விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது தக்காளியின் விலை குறைந்துள்ளதால் சாலையோரங்களில் கொட்டி அதனை அழித்து வருகின்றனர். சந்தையில் மொத்த விற்பனையில் தற்போது சுமார் 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.3  முதல் ரூ.5 வரை விற்பனையாகும் நிலையே உள்ளது. இதனால் வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்கும் நிலையில் கூட லாபம் கிடைப்பதில்லை எனக்கூறி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய முன்னணியினர் கைது!
02:13BJP : பொள்ளாச்சி.. தொழில் வர்த்தக சபை தலைவர் மறைவு - நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை!
00:39Shocking Video: நொடிப்பொழுதில் சூழ்ந்துகொண்ட தெருநாய்கள்; கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை காப்பாற்றிய தந்தை
00:58Kovai Kutralam: மலைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
00:59"அட நானும் வாக்கிங் தான் வந்தேன்".. இரவு நேரத்தில் ஷாக் கொடுத்த காட்டு யானை - தெறித்து ஓடிய தம்பதி! Video!
00:58Coimbatore: முன்னே செல்வது யார்? ஆட்சியர் அலுவலகம் முன்பாக மல்லுகட்டிய அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள்
01:00Shocking Video in Coimbatore: சாலையில் நடந்து சென்ற முதியவரை ஆக்ரோஷமாக மித்து தள்ளிய காட்டு யானை
02:16மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குன்னூர் சாலையில் முறிந்து விழுந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு! Video!
கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் களைகட்டிய முப்பெரும் விழா! கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
00:26Rainbow Coimbatore : கோவையில் சில்லென்ற வானிலை.. விண்ணை அலங்கரித்த இரு வானவில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Read more