கோவை பேஷன் ஷோவில் விஜயகாந்திற்காக பார்வையாளர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்; வியந்து பார்த்த ஏற்பாட்டாளர்கள்

Jan 8, 2024, 1:42 PM IST

கோவை காளப்பட்டி பகுதியில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடை அலங்கார அணி வகுப்பு  நிகழ்ச்சியில், மறைந்த தேமுதிக தலைவரும், நடிகர் சங்க முன்னாள் தலைவருமான விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேடையில் அவரது படத்திற்கு மாடல்கள் மட்டுமின்றி குழந்தைகளும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் பேஷன் ஷோவை காண வந்த பார்வையாளர்கள் தங்களது செல்போன்  விளக்குகளை ஒளிர விட்டு அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ராஜா கூறுகையில், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த அஞ்சலி கூட்டத்தை நடத்தியதாகவும். ஆனால் இது நெகிழ்ச்சியான தருணமாக மாறியது விஜயகாந்தின் மீது மக்கள் வைத்துள்ள அன்பையே காட்டுவதாக அவர் நெகிழ்வுடன் கூறினார்.