உயிருக்கு போராடிய டால்பின்..காப்பாற்றிய காவலர்..!

Feb 7, 2020, 5:59 PM IST

நாகை மாவட்டம்,வேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கி உயிருக்குப் போராடிய டால்பின் ஒன்று உயிருடன் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டது.

 டால்பின் ஒன்று கரை ஒதுங்கி தண்ணீர் குறைந்த சேற்றுப் பகுதியில் சிக்கிக்கொண்டிருந்தது தெரிய வந்தது.

அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் நிலைய காவலர் வடிவேல் டால்பினை பாதுகாப்பாக மீட்டு ஆழமான கடல் பரப்புக்குள் விடப்பட்டது.