சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!

Published : Jun 24, 2026, 10:00 PM IST

சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே எதிர்பாராத விதமாகக் கடும் மோதல் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தின் நேரமில்லா நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் திரவியம், தமிழக முதலமைச்சர் விஜயைப் புகழ்ந்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர்கள், அவருக்கு எதிராக அவையிலேயே கடுமையாகக் கூச்சலிட்டு முழக்கங்களை எழுப்பினர். "நம்பிக்கை துரோகி காங்கிரஸ்" என்று திமுகவினர் உரக்க முழக்கமிட்டதால் அவையில் கடுமையான அமளி நிலவியது. சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர மேயர் பிரியா தொடர்ந்து எச்சரிக்கை மணியை (Bell) ஒலித்தும் இருதரப்பு கவுன்சிலர்களும் அடங்காமல் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். திமுகவினரின் இந்த கடும் எதிர்ப்பைக் கண்டித்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர். இந்த மோதல் சென்னை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
04:04தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!
02:21சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட நிகழ்வுகளை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டால் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை
03:35திமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!
04:28தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்: மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை