சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!

Published : Jun 24, 2026, 10:00 PM IST

சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே எதிர்பாராத விதமாகக் கடும் மோதல் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தின் நேரமில்லா நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் திரவியம், தமிழக முதலமைச்சர் விஜயைப் புகழ்ந்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர்கள், அவருக்கு எதிராக அவையிலேயே கடுமையாகக் கூச்சலிட்டு முழக்கங்களை எழுப்பினர். "நம்பிக்கை துரோகி காங்கிரஸ்" என்று திமுகவினர் உரக்க முழக்கமிட்டதால் அவையில் கடுமையான அமளி நிலவியது. சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர மேயர் பிரியா தொடர்ந்து எச்சரிக்கை மணியை (Bell) ஒலித்தும் இருதரப்பு கவுன்சிலர்களும் அடங்காமல் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். திமுகவினரின் இந்த கடும் எதிர்ப்பைக் கண்டித்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர். இந்த மோதல் சென்னை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

04:13"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!
09:33"நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகிறவர்.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” - செங்கோட்டையன்
10:57"சினிமா காட்டி ஏமாற்ற முடியாது!" முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி கொடுத்த மரண மாஸ் பதிலடி!
08:28அரசு வேலை கனவு நனவானது... TNPSC தேர்வானவர்களுக்கு ஆணை வழங்கிய விஜய்!
09:17Sports தான் என்னுடைய Life.. அரசியலிலும் விளையாட்டுத்தனம் இருக்கக் கூடாது! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
05:44தவெக பாஜகவின் B-டீமாக தான் அணைத்து நிலையிலும் செயல்படுகிறது ! சேகர்பாபு பேட்டி
05:29விவசாயிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள்!" – மேகதாது அணைக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!
06:15தவெக கட்சி போன்ற சாதாரணமான கட்சி இல்லை பாஜக கட்சி ! அதிரவைத்த நயினார் நாகேந்திரன்!
10:15💥 "சட்டமன்றத்தை 'ஷூட்டிங் ஸ்பாட்' ஆக்கிட்டார் விஜய்!" - உதயநிதி ஸ்டாலின் கொடுத்த மரண அடி!