இன்று 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. வெளியிட்ட 2 நிமிடங்களில் செல்போனில் பார்க்கலாம் !!

By Selvanayagam PFirst Published Apr 29, 2019, 7:23 AM IST
Highlights

எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10 ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று கால் 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. வெளியிட்ட 2 நிமிடங்களில் மாணவர்கள் ஏற்கனவே கொடுத்த செல்போன்களுக்கு ரிசல்ட் அனுப்பி வைக்கப்படும்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.

ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான், இந்த ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவை மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பார்க்கலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட இருக்கிறது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

click me!