Published : Dec 03, 2022, 07:38 AM ISTUpdated : Dec 03, 2022, 03:16 PM IST

Asianet Tamil News Live: அரசாணை வெளியிடாததில் தவறு இல்லை.. அமைச்சர் ரகுபதி

சுருக்கம்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடைக்கு இந்தியாவுக்கே முன் மாதிரியான ஒரு சட்டத்தை இயற்றியுள்ளோம். அவசர சட்டம் கொண்டு வந்து உடனடியாக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றினோம். அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததில் எந்த தவறும் இல்லை. அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததற்கான காரணத்தை ஆளுநரிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Asianet Tamil News Live: அரசாணை வெளியிடாததில் தவறு இல்லை.. அமைச்சர் ரகுபதி

03:16 PM (IST) Dec 03

கேட்கும்போதே தலை சுற்றுகிறது.. பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த அபிநயா கைது.. வெளியான அதிர்ச்சி தகவல்.!

சென்னை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம்  1வது தெருவை சேர்ந்தவர் நடராஜன் (25). இவர், சானடோரியம் பகுதியில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தில் டெலிவரிபாயாக வேலை செய்து வந்தார். அப்போது தாம்பரம்-முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள ஒரு பேக்கரிக்கு மாவு பொருட்கள் டெலிவரி செய்ய செல்லும்போது அபிநயா (எ) கயல்விழி (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதுது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலானது. 

மேலும் படிக்க

01:27 PM (IST) Dec 03

ஆவின் பச்சைப்பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு.. அதற்கு இதுதான் காரணம்.. அன்புமணி ராமதாஸ்..!

பச்சை உறை பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முதன்மை காரணம் ஆரஞ்சு உறை பால் விலை உயர்த்தப்பட்டது தான் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

11:26 AM (IST) Dec 03

கள்ளக்காதலனுடன் மெய்மறந்து உல்லாசம்.. குழந்தையின் உயிருக்கு ஏமனாக மாறிய கொடூர தாய்.. விசாரணையில் பகீர்.!

தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிணற்றில் தவறி விழுந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக  தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் படிக்க

11:25 AM (IST) Dec 03

பைக்குகள் மோதல்.. தூக்கி வீசப்பட்ட இரண்டு பேர் படுகாயம்... வெளியான பகீர் சிசிடிவி காட்சி.!

பரக்குடியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வௌியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

11:24 AM (IST) Dec 03

இப்போ லிப்டில் போனால் கூட பாதுகாப்பு இல்லை.. அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சீண்டும் தமிழிசை..!

தற்போது லிப்டில் சென்றால்கூட பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனை லிப்டில் சிக்கிக் கொண்டதை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கிண்டலாக கூறியுள்ளார். 

மேலும் படிக்க

11:24 AM (IST) Dec 03

அனைத்து ஊனமுற்றோர்களுக்கும் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு.. முதல்வர் அறிவிப்பு

ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உள்பட அனைத்து ஊனமுற்றோர்களுக்கும் ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிக்கப்படுவதாக உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

09:18 AM (IST) Dec 03

டிசம்பர் 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். ஆகையால், டிசம்பர் 7ம் தேதி வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

08:50 AM (IST) Dec 03

சென்னை ஐஐடியில் இட ஒதுக்கீட்டிற்கு அநீதி.. உயர் சாதியினருக்கு முக்கியத்தும்.. கொதிக்கும் வேல்முருகன்..!

நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தில், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பணி நியமன மற்றும் உயர்கல்விக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை பறித்திருப்பது தகவல் உரிமை சட்டத்தின் வாயிலாக அம்பலமாகியுள்ளது என வேல்முருகன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

08:13 AM (IST) Dec 03

Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் இன்று முக்கிய ஏரியாக்களில் கரண்ட் கட்.. இதோ லிஸ்ட்.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கிண்டி உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

07:42 AM (IST) Dec 03

திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுப் பார்க்க முடியாது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

திமுக அரசு மீது அரசியல் எதிரிகள் விமர்சனத் தாக்குதல் நடத்தினால், எங்களுக்கு முன்னால் அதனைத் தடுக்கக்கூடிய கேடயமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர் நம்முடைய ஆசிரியர் வீரமணி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

07:42 AM (IST) Dec 03

ஜெ.,யின் நீண்டநாள் பாதுகாவலர் இழப்பு பேரிழப்பு.. ஃப்ளாஷ்பேக்கை கூறி கலங்கிய பூங்குன்றன்..!

நான் பார்த்து பழகிய மனிதர்களில் இவருக்கு என் இதயத்தில் என்றுமே தனி இடம் உண்டு. அன்பு நிறைந்தவர். ஆற்றல் மிகுந்தவர். அண்ணா என்று பலரை அழைத்தாலும் இவரை 'சீமைச்சாமி அண்ணா' என்று அழைக்கும் போது மட்டுமே உள்ளத்தில் உவகை கூடும்.

மேலும் படிக்க


More Trending News