தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்தும் பேசியதாக ரஜினி தெரிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வைகோவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் அதிமுகவை சேர்ந்த செல்லூர் ராஜு, ‘ரஜினிகாந்த் ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாகப் பேசுவார்' என்று கூறினார்.

07:35 PM (IST) Aug 10
ஐயப்ப பக்தர்கள் தரிசனம் முடிந்து திரும்பிச் செல்லும்போது சபரிமலையில் இருந்து பிரசாதங்களான அரவணை பாயசம், அப்பம், நெய். விபூதி, குங்குமம் ஆகியவற்றை வாங்கி வந்து தங்கள் குடும்பத்தாருக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் கொடுப்பது வழக்கம்.
07:30 PM (IST) Aug 10
‘நடிகர் ரஜினிகாந்த் சொல்வது யாருக்கும் புரியவில்லை. அது அவருக்கும் புரிவதில்லை.நடிகர் ரஜினிகாந்தை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று ரஜினிகாந்தை கிண்டலடித்து பேசினார் வைகோ.
05:43 PM (IST) Aug 10
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல் துறைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டுள்ளது.
05:34 PM (IST) Aug 10
ஆளுநர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ஆளுநர் அரசியல் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். அரசியலில் பேசியதாக ரஜினியை கூறியதற்கு சமூகத்தில் நடைபெறும் விஷயங்களை பேசியதாகத் தான் அர்த்தம் என்றும் அண்ணாமலை புதுவிளக்கம் கொடுத்துள்ளார். மேலும் படிக்க
05:33 PM (IST) Aug 10
அதிமுகவைப் பொறுத்தவரையில் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிகளுக்கு வரமுடியும் ஆனால் திமுகவில் "நிதிகள்" மட்டுமே பதவிக்கு வரமுடியும் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். சாதாரண கிளைச் செயலாளராக இருந்த நான் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தின் இடைக்கால பொதுச் செயலாளராக வந்திருக்கிறேன் இது திமுகவில் சாத்தியமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் படிக்க
05:32 PM (IST) Aug 10
கூட்டுறவு வங்கி ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கண்ணூர் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழக- ஆந்திர எல்லையில் தலைமறைவாக இருந்த கவுன்சிலர் டி.வி கிருஷ்ணகுமாரை எடக்காடு தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் படிக்க
05:31 PM (IST) Aug 10
என்னை பாஜகவிலிருந்து நீங்கினாலும் பரவாயில்லை நான் பெரியாருக்கு 40 இடங்களில் சிலை வைக்கிறேன், ஆனால் அதன் கீழ் அவர் சொன்ன தமிழ் படித்தவன் காட்டுமிராண்டி எனபதை எழுதுவேன் என பாஜகவை சேர்ந்த அமர்பிரகாஷ் ரெட்டி கூறியுள்ளார். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியில் உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பைட் மாஸ்டர் கனல்கண்ணன் பேசி சர்ச்சையாகி உள்ள நிலையில் அமர் பிரசாத் அவருக்கு ஆதரவாக இவ்வாறு பேசியுள்ளார். மேலும் படிக்க
05:30 PM (IST) Aug 10
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுகதான் முழுக்காரணம் என்றும் இதற்கு அதிமுகவில் உள்ளவர்களோ, அல்லது மத்திய அரசு காரணம் இல்லை என சசிகலா தெரிவித்துள்ளார். மாயத்தேவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்த மதுரை வந்த அவர் இவ்வாளு கூறினார். மேலும் படிக்க
05:29 PM (IST) Aug 10
சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகிய மூவர் வேண்டுமானால் ஒன்றாக இணையலாம் ஆனால் அவர்கள் ஒருபோதும் அதிமுகவில் இணைய முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதே அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஒலிம்பியாட் போட்டி இதைவிட சிறப்பாக நடந்திருக்கும் என்றும் ஜெயக்குமார் கூறினார். மேலும் படிக்க
05:14 PM (IST) Aug 10
இலங்கையில் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.
04:45 PM (IST) Aug 10
சண்முகத்தின் 2-வது மகளும், நெய்வேலி 9-வது வட்டத்தை சேர்ந்த தங்கப்பன் மகன் தமிழ்வளவன் (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் தாய் ஷகிலாவுக்கு தெரியும். ஆனால் சண்முகத்துக்கு தெரியாது.
04:25 PM (IST) Aug 10
நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக் கூறிவிட்டு மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன்? பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா என விளக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். பொதுக்குழு விதிகளை பின்பற்றி நடத்தப்பட்டதா? இல்லையா என்பது குறித்த வாதங்களை முன் வையுங்கள் என ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார். சட்டப்பூர்வமாக அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதா? முறையாக அழைப்பு விடுக்கப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பினார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விதிகள் மீறப்பட்டு இருந்தால்,முறையாக பின்பற்றப்படவில்லை என்றால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
03:54 PM (IST) Aug 10
ஏதோ நான் விளையாட்டாகச் சொல்லவில்லை. இவர் ‘சாஃப்ட் முதலமைச்சர்’என்று யாரும் கருதிவிட வேண்டாம். நேர்மையானவர்களுக்குத்தான் நான் சாஃப்ட். தவறு செய்வோருக்கு - குறிப்பாக போதைப் பொருள் நடமாட்டத்திற்கு துணை போவோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன்' - முதல்வர் எச்சரிக்கை !!
03:44 PM (IST) Aug 10
விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு பகுதியில் 12ம் வகுப்பு மாணவி வகுப்பறையிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை தொடர்பாக மாணவியின் தோழிகள், வகுப்பாசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
03:35 PM (IST) Aug 10
தேர்தல் விதி திருத்தத்துக்கு, பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காவிட்டால் பதவிகள் காலியாகி விடும் என்றால், அது பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பொருந்தும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானால், பொருளாளர், தலைமை கழக செயலாளர் அந்த பதவிகளுக்கான பணிகளை மேற்கொள்வர் என ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதிமுகவில் இரு பதவிகளும் காலியாக உள்ள நிலையில் பொதுக்குழுவை யார் கூட்டலாம்? நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு கட்சி விதிகளின் படி தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டலாம் என தெரிவிக்கப்பட்டது.
03:16 PM (IST) Aug 10
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் தொடங்கியது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஜெயலலிதா நிரந்தர பொதுச் செயலாளராக நீடிப்பார் என 2017-ல் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதுதான், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது கட்சியின் அடிப்படை விதி, அதில் திருத்தம் செய்ய முடியாது என கூறியுள்ளார்.
02:56 PM (IST) Aug 10
ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமியும், மற்றொரு பக்கம் ஓ.பன்னீர்செல்வமும் மாறி மாறி நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறி வருகின்றனர்.இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் ஒன்றாக கரம் கோர்த்து களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
02:21 PM (IST) Aug 10
விருமன் படத்தில் இடம்பெறும் மதுரவீரன் என்கிற பாடலை இசையமைப்பாளர் யுவனுடன் முதலில் சேர்ந்து பாடியது ராஜலட்சுமி தான், பின்னர் அந்த பாட்டை அதிதியை பாட வைத்து வெளியிட்டனர். அதுகுறித்து ராஜலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க
02:20 PM (IST) Aug 10
மாநிலங்களுக்கு கூடுதல் தவணை வரி பகிர்வாக ரூ.1.16 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்தது. இதில், தமிழகத்திற்கு ரூ.4,758 கோடியை விடுவித்துள்ளது. மாநிலங்களின் முதலீடு மற்றும் வளர்ச்சி செலவினங்களை வலுப்படுத்தும் வகையில் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
02:18 PM (IST) Aug 10
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ் உடன் வரும் காலத்தில் கை கோர்க்க வாய்ப்பு உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
02:04 PM (IST) Aug 10
காதலிக்க மறுத்ததால் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து அவரது அண்ணனுக்கு ஃபார்வேர்ட் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
02:02 PM (IST) Aug 10
டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் இணையலாம். ஆனால் அவர்களை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை. அதிமுக ஆட்சி இருந்திருந்தால் இதை விட இன்னும் சிறப்பாக செஸ் ஒலிம்பியாடை நடத்தியிருப்போம். அரசியல் இல்லாமல் உலகமே கிடையாது. ஆளுநரிடம் என்ன மாதிரியான அரசியலை பேசினார் என ரஜினியிடம் கேளுங்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
01:56 PM (IST) Aug 10
டிடிவி.தினகரன் பேச்சை நாங்கள் பெரிதாக எடுத்து கொள்ளப் போவதில்லை. சசிகலா பேச்சுக்கு நாங்கள் எந்த பதிலும் சொல்லப்போவதில்லை. அதிமுகவுக்கு ஒரே எதிரி திமுக மட்டுமே, மற்றவர்களை நாங்கள் பொருட்படுத்துவதில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
01:52 PM (IST) Aug 10
தமிழகத்தில் இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
01:29 PM (IST) Aug 10
பள்ளிகளில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை போதைப்பொருள் பற்றி விழிப்புணர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதே போல் நாளை காலை 10.30 மணிக்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. போதைபொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தை் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்க உள்ள நிலையில், இந்த ஆணையை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
01:03 PM (IST) Aug 10
பிராமணர் அல்லாதவர்களும் சபரிமலை பிரசாதம் தயாரிக்கலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது. மலையாளி பிராமணர்கள் மட்டுமே சபரிமலை பிரசாதங்கள் தயாரிக்கலாம் என்ற விளம்பரத்தை எதிர்த்து மனித உரிமைகள் ஆணையத்துக்கு அம்பேத்கர் கலாச்சார பேரவை தலைவர் சிவன் புகார் அளித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
12:51 PM (IST) Aug 10
தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்கள் திட்டமிட்டு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. இரு மாநில செவிலியர்களும் தேர்வு எழுத இயலாதபடி மத்திய அரசு திட்டமிட்டு புறக்கணித்து உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.மேலும் படிக்க
12:44 PM (IST) Aug 10
விழுப்புரம் அருகே திமுக பிரமுகர் 3 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12:16 PM (IST) Aug 10
ஆறுமுகநேரி திமுக நகர செயலாளர் சுரேஷ் கொலை வழக்கில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வரும் 30 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றம் முன் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
11:53 AM (IST) Aug 10
அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் வழங்கியதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஆகஸ்ட் 19க்கு முன் பட்டியலிட்டு விசாரிக்க முயற்சிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
11:52 AM (IST) Aug 10
கடந்த 3 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து 3 பெரிய கட்சிகள் விலகியுள்ளது. அந்தக் கட்சிக்கு பின்னடைத் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.விரிவான அலசல்களுக்கு..........
11:21 AM (IST) Aug 10
ரஜினி யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்,அரசியல் பேசலாம்.அதில் கருத்து இல்லை; ஆனால் ஆளுநர் தன்னுடைய பொறுப்பை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
11:10 AM (IST) Aug 10
காமன்வெல்த் வாள்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் சேபர் பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார். ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை 15-10 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பவானி தேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
11:09 AM (IST) Aug 10
சென்னை கோயம்பேடு முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11:03 AM (IST) Aug 10
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரை காலவரையின்றி ஒத்திவைத்து சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி பட்ஜெட்க்கு ஒப்புதல் அளிக்காததால், பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் நாளை முதல் 2 நாட்கள் விவாதம் நடைபெறவிருந்தது.
10:41 AM (IST) Aug 10
பி.எஸ்.என்.எல்.க்கு அலைக்கற்றையைப் பெறுவதற்கானக் கட்டமைப்பு இல்லையெனும் பொருத்தமற்ற வாதத்தை ஏற்பதாக வைத்துக்கொண்டாலும், அதே கேள்வியை அதானி குழுமத்துக்குப் பொருத்திப் பார்ப்பார்களா நாட்டையாளும் ஆட்சியாளர்கள்? அதானியின் ஏ.டி.என்.எல். நிறுவனத்துக்கு எந்தக் கட்டமைப்பு இருக்கிறது? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க..
10:39 AM (IST) Aug 10
தமிழகத்தில் போதைப்பொருள் நுழைவதை தடுக்க முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க கூட்டு முயற்சி அவசியம் என்று அவர் கூறினார். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருட்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆலோசனைக்கூட்டத்தில் முதலமைச்சர் தெரிவித்தார். பஞ்சாப், குஜராத் மாநிலங்களை விட தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் குறைவு என்று சமாதானம் அடைய முடியாது என்று அவர் கூறினார்.மேலும் படிக்க
10:11 AM (IST) Aug 10
போதைப் பொருள் நடமாட்டத்தை தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
10:02 AM (IST) Aug 10
889 மருந்தாளுனர் பணியிடங்களுக்கு இன்று முதல் வரும் 30ம் தேதி வரை http://mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
09:54 AM (IST) Aug 10
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். கருப்பு சட்டை அணிந்து வந்து கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், ஆளுநர் தமிழிசை உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.