திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது !

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது !

Published : Mar 23, 2026, 01:02 PM IST

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .பங்குனி பெருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை பல்லக்கில் கொடிபட்டம் வீதிகளில் கொண்டு செல்லப்பட்டு கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது . முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய கோயில் குடைவரைக் கோயிலாகும். இக்கோயிலில் 15 நாட்கள் நடைபெறும் பங்குனித் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். அதனையொட்டி முதல்நாளான இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தெய்வானை சமேதமாய் சுப்பிரமணிய சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். இவர்களது முன்னிலையில் காலை 8.35 மணியளவில் கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. பின்பு கொடிமரத்திற்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

03:09திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது !
06:26டி.வி.கே ஒழிக புஸ்ஸி ஆனந்த் ஒழிக என கோஷமிட்ட தவெக வினரால் பரபரப்பு...! பரபரப்பு காட்சிகள்
02:56ஒரே தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட முயன்ற ஜெயலலிதா.. கடைசில என்ன ஆச்சு தெரியுமா..?
03:37மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு ஒன்றிய அரசிடம் திட்டம் இல்லை ! எம்.பி கனிமொழி பேட்டி
04:06தொகுதிப் பங்கீடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சந்திப்பு ! TTV தினகரன் விளக்கம்
04:41அதிமுக - திமுகவிற்கும் மட்டும்தான் போட்டி....ஒரு சதவீதம் கூட சசிகலா போட்டி இல்லை - ராஜன் செல்லப்பா !
07:54சவுக்கு சங்கர் விவாகரம் ..! பாஜக நிர்வாகி கார்த்திக் கோபிநாத் விளக்கம் ! | Karthik Gopinath
02:23முடிவுக்கு வரும் திமுக - சிபிஎம் கூட்டணி? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
04:51தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கனும் அந்த அடிப்படையில் தான் சசிகலா உடன் கூட்டணி! ராமதாஸ் பேட்டி