
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற மறுநாளே யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதாவது கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்தார். முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இந்நிலையிர் மது மற்றும் போதையில்லாத தமிழ்நாடு அமைக்கப்பட்டால், அதை விட பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு அளிக்க முடியாது. அந்த இலக்கை நோக்கி முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பயணிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.