இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் ,காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்,நாகை, மழையின் தாக்கம்
நாளை முதல் படிப்படியாக குறையும் .
காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், கடலூர்,நாகை, விழுப்புரம் மற்றும் அரியலூரில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காலம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது.
ஆனாலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. தமிழகத்தில் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தொடங்கியது , அன்றுமுதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வந்தது. கடந்த மாதம் சென்னையில் வலுபெற்ற பருவமழை கன மழையாக வெளுத்து வாங்கியது. இந்நிலையில் மழை ஒய்ந்து சில நாட்களாக வெயில் அடிக்க ஆரம்பித்தது .பின்னர் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது, இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் ,காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்,நாகை, விழுப்புரம் மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
மழையின் தாக்கம் நாளை முதல் படிப்படியாக குறையும் என்றும் , தற்போதைய கணிப்புகளின் அடிப்படையில் வட கிழக்கு பருவமழை அடுத்த இரண்டு நாட்களில் நிறைவு பெற வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் - 3செ.மீ. மழையும், சென்னை நுங்கம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி - 2செ.மீ மழையும், சேலம் தம்மம்பட்டி - 1செ.மீ மழையுப் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்து வரை நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.