Paris 2024:டிராப் பிரிவில் 21ஆவது இடம்: பதக்க வாய்ப்பை இழந்து தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் வெளியேற்றம்!

Published : Jul 30, 2024, 08:38 PM IST
Paris 2024:டிராப் பிரிவில் 21ஆவது இடம்: பதக்க வாய்ப்பை இழந்து தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் வெளியேற்றம்!

சுருக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் 2024 துப்பாக்கிச் சுடுதல் ஆண்களுக்கான டிராப் பிரிவில் தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளார்.

பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கடந்த 26ஆம் தேதி முதல் தொடக்க விழாவுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை, பளுதூக்குதல், மல்யுத்தம் என்று 16 விளையாட்டுகளில் பங்கேற்று வருகிறது. ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 13 தமிழக வீரர்கள் உள்பட 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.

இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த சரப்ஜோத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இதுவரையில் இந்தியா மகளிர் ஒற்றையர் பிரிவு 10மீ ஏர் பிஸ்டல் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இந்தியாவிற்காக மனு பாக்கர் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று கொடுத்துள்ளார். இந்த நிலையில் தான் துப்பாக்கி சுடுதல் ஆண்களுக்கான டிராப் பிரிவில் தமிழக வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் கலந்து கொண்டு விளையாடினார். முதல் நாள் தகுதிச் சுற்றின் முடிவில் 68 புள்ளிகளுடன் 30ஆவது இடத்தில் இருந்த தொண்டைமான் 2ஆவது நாள் போட்டியை இன்று தொடங்கினார்.

Paris 2024 Olympics: பாரிஸில் கடும் புயல் எச்சரிக்கை – ஒலிம்பிக் போட்டி ரத்து? போட்டி அட்டவணை மாற்றமா?

இன்று நடைபெற்ற 4ஆவது சுற்றில் 25 டிராப்களை சுட்டு வீழ்த்தினார். அதோடு புள்ளிப்பட்டியலில் 25ஆவது இடங்களுக்கு சென்றார். இதே போன்று கடைசி டிராப்களையும் சுட்டு வீழ்த்தினார். எனினும், 5 சுற்றுகள் முடிவில் 118 புள்ளிகளுடன் 21ஆவது இடம் பிடித்த அவரால் இறுதி போட்டிக்கான பதக்க வாய்ப்பு சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். ஆனால், தொண்டைமான் 21ஆவது இடம் பிடித்த நிலையில் பதக்க வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறினார்.

ரோவிங்கில் காலிறுதிப் போட்டியில் 5ஆவது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்த இந்திய வீரர் பால்ராஜ் பன்வார்!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!