Paris 2024 Olympics: பாரிஸில் கடும் புயல் எச்சரிக்கை – ஒலிம்பிக் போட்டி ரத்து? போட்டி அட்டவணை மாற்றமா?

Published : Jul 30, 2024, 06:35 PM IST
Paris 2024 Olympics: பாரிஸில் கடும் புயல் எச்சரிக்கை – ஒலிம்பிக் போட்டி ரத்து? போட்டி அட்டவணை மாற்றமா?

சுருக்கம்

கடந்த 26ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர் கடந்த 26 ஆம் தேதி தொடக்க விழா உடன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். வில்வித்தை, ரோவிங், பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், ரோவிங், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜூடோ, கோஃல்ப் என்று 16 விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றன.

ரோவிங்கில் காலிறுதிப் போட்டியில் 5ஆவது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்த இந்திய வீரர் பால்ராஜ் பன்வார்!

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 4ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மகளிர் ஒற்றையர் 10மீ ஏர் பிஸ்டல் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது. ஹரியானாவைச் சேர்ந்த இந்திய வீராங்கனை மனு பாக்கர் இந்தியாவிற்கு 2 பதக்கங்களை வென்று கொடுத்து சாதனை படைத்தார். இந்த நிலையில் தான் பாரிஸில் கடும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் கனமழை பெய்யும் என்றும், பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்றும் பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Jiya Rai: 16 வயதில் ஆங்கில கால்வாயை கடந்து இந்திய கடற்படை வீரரின் மாற்றுத்திறனாளி மகள் ஜியா ராய் உலக சாதனை!

இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: பாரிஸ் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புயல் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, 20 முதல் 40 மில்லி மீட்டர் வரை சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் மூலமாக ஒலிம்பிக் போட்டிகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு மழை பெய்தால் போட்டி அட்டவணை மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. 

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர்!

மழையின் காரணமாக போட்டிகள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவின் போது மழை பெய்தது. அப்போது அணிவகுப்பில் கலந்து கொண்ட வீரர்கள் மழையின் நனைந்தபடி படகுகளில் ஊர்வலமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!