Jiya Rai: 16 வயதில் ஆங்கில கால்வாயை கடந்து இந்திய கடற்படை வீரரின் மாற்றுத்திறனாளி மகள் ஜியா ராய் உலக சாதனை!

Published : Jul 30, 2024, 04:02 PM IST
Jiya Rai: 16 வயதில் ஆங்கில கால்வாயை கடந்து இந்திய கடற்படை வீரரின் மாற்றுத்திறனாளி மகள் ஜியா ராய் உலக சாதனை!

சுருக்கம்

இளம் வயதில் ஆங்கிலக் கால்வாயை நீந்திச் சென்று கடந்து இந்தியா கடற்படை வீரரின் மாற்றுத்திறனாளி மகளான ஜியா ராய் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் அப்போட்ஸ் கிளிஃப் பகுதியிலிருந்து பிரான்சின் பாய்ண்ட் டே லா கோர் டியூன் பகுதி வரை பாய்ந்து செல்லும் ஆங்கில கால்வாயின் 34 கிமீ தூரத்தை 16 வயதான இந்திய மாற்றுத் திறனாளியான ஜியா ராய் 17 மணி நேரம் 25 நிமிடங்களில் நீந்திச் சென்று கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அதோடு, ஆங்கிலக் கால்வாயைக் கடந்த உலகின் இளம் வயது பாரா நீச்சல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். அதோடு, இளம் வயதில் குறைவான நேரத்தில் ஆங்கிலக் கால்வாயை நீந்திச் சென்று ஒரு மாற்றுத்திறனாளி வீராங்கனையாக சரித்திரம் படைத்துள்ளார்.

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர்!

ஆங்கிலக் கால்வாயை கடப்பதற்கு முன்னதாக பாக் வளைகுடாவை நீந்தி சென்று கடந்து சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், இந்திய கடற்படை வீரரின் மகள். ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மிக உயரிய விருதான பிரதமர் ராஷ்திரிய பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் தற்போது 17 மணி நேரம் 25 நிமிடங்களில் ஆங்கில கால்வாயை கடந்து புதிய உலக சாதனை படைத்த ஜியா ராயிற்கு கடற்படை சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவித்து வருகிறது. ஏசியாநெடி நியூஸ் தமிழ் சார்பாக நாமும் ஒரு வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். வாழ்த்துக்கள் சகோதரி….

இந்தியாவிற்கு 2ஆவது பதக்கம் – வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி!

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!