ரோவிங்கில் காலிறுதிப் போட்டியில் 5ஆவது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்த இந்திய வீரர் பால்ராஜ் பன்வார்!

Published : Jul 30, 2024, 05:16 PM IST
ரோவிங்கில் காலிறுதிப் போட்டியில் 5ஆவது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்த இந்திய வீரர் பால்ராஜ் பன்வார்!

சுருக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் 4ஆவது நாளான இன்று நடைபெற்ற ரோவிங் காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் 5ஆவது இடம் பிடித்து பதக்கத்திற்கான வாய்ப்பை நழுவவிட்டுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா 16 விளையாட்டுகளில் பங்கேற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இதுவரையில் இந்தியா 2 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Jiya Rai: 16 வயதில் ஆங்கில கால்வாயை கடந்து இந்திய கடற்படை வீரரின் மாற்றுத்திறனாளி மகள் ஜியா ராய் உலக சாதனை!

இதன் மூலமாக ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார். மேலும் நீச்சல் மற்றும் டென்னிஸ் போட்டிகளில் இந்தியா பதக்கம் இல்லாமல் வெளியேறியுள்ளது. இந்த நிலையில் தான் ரோவிங் போட்டியில் இந்தியா சார்பில் ஒரேயொரு வீரர் மட்டுமே பங்கேற்று இருந்தார்.

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர்!

முதல் நாள் நடைபெற்ற காலிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் 7 நிமிடம் 5.10 வினாடிகளில் இலக்கை கடந்து 5ஆவது இடம் பிடித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆனால், பதக்கத்திற்கான வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளார். மேலும், தற்போது 13 முதல் 24 இடங்களுக்கான போட்டியில் இடம் பெற்றுள்ளார். இந்தப் போட்டி நாளை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு 2ஆவது பதக்கம் – வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!