பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று 9ஆவது முறையாக சாம்பியனான டீம் இந்தியா!

Published : Jul 04, 2023, 11:44 PM IST
பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று 9ஆவது முறையாக சாம்பியனான டீம் இந்தியா!

சுருக்கம்

குவைத் அணிக்கு எதிரான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று 9ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.

பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் 16ஆவது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், 8 அணிகள் இடம் பெற்று 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடின. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி கண்டது.

வெஸ்ட் இண்டீஸ், ஓமனைத் தொடர்ந்து பரிதாபமாக வெளியேறிய ஜிம்பாப்வே!

இந்தப் போட்டியைத் தொடர்ந்து நடந்த 2ஆவது போட்டியில் இந்தியா, நேபாள் அணியை எதிர்கொண்டது. இதில், இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் குவைத் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலை பெறவே, இரு அணிகளுமே அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

ஷாக்கிங் நியூஸ்; ஜிம்பாப்வே அணியை கதற வைத்த ஸ்காட்லாந்து: உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவது யார்?

இதையடுத்து நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா, லெபனான் அணியை எதிர்கொண்டது. இதில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் லெபனான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் குவைத் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று நடந்தது.

வெஸ்லி வரலாற்றில் முதல் முறை: ஐசிசி பேட்டிங் ரேங்கிங்கில் இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனை சமரி அத்தபத்து முதலிடம்!

போட்டி தொடங்கிய முதல் 16 நிமிடத்திலேயே குவைத் அணி தனது முதல் கோல் அடித்தது. குவைத் அணிக்காக ஷபைப் அல்-கல்தி முதல் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்தரி கோல் அடிக்க முயற்சித்து கோட்டைவிட்டார். இறுதியாக இந்தியா 39ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது.

முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் சென்ற ருதுராஜ், சுப்மன் கில், யஷஸ்வி: டெஸ்ட் போட்டி எப்படி இருக்கும்?

 

 

முதல் ஒரு மணி நேரத்தில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்த நிலையில், அடுத்த 30 நிமிடத்திலும் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தன. இதனால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில், இந்திய கேப்டன் ஒரு கோல் அடிக்கவே இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அடுத்து சந்தேஷ் ஜிங்கன் கோல் அடிக்கவே, இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

13ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் தோனி அண்ட் சாக்‌ஷி தோனி!

இதையடுத்து குவைத் வீரர் ஒரு கோல் அடித்த நிலையில், மீண்டும் இந்திய வீரர் ஒரு கோல் அடித்தார். அதன் பிறகு குவைத் வீரர் கோல் அடித்தார். இதனால், இந்தியா மற்றும் குவைத் அணிகள் 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றன, அடுத்து குவைத் வீரர் அப்துல் அஜீஸ் மஹ்ரான் ஒரு கோல் அடிக்க 3-3 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றன.

4ஆவது இடம் யாருக்கு? முதல் தகுதிச் சுற்றில் லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் பலப்பரீட்சை!

அடுத்து சுபாஷிஷ் போஸ் கோல் அடிக்க இந்தியா 4-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு குவைத் வீரர் கோல் போட இரு அணிகளும் சமநிலை பெற்றன. அதன் பிறகு இந்திய வீரர் நௌரெம் மகேஷ் சிங் ஒரு கோல் அடிக்கவே இந்தியா 5-4 என்ற கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று 9ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2023 உலகக் கோப்பை தான் கடைசி உலகக் கோப்பையா?

இதற்கு முன்னதாக, கடந்த 1993, 1997, 1999, 2005, 2009, 2011, 2015, 2021 ஆகிய ஆண்டுகளில் வெற்றி கண்டுள்ளது. தற்போது 9ஆவது முறையாக இந்தியா சாம்பியனாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!