ஓரம்போ ஓரம்போ…டெல்லியில் சிஎஸ்கே வீரர்கள் வந்த பஸ்ஸை சூழந்து கொண்ட ரசிகர்கள்!

Published : May 20, 2023, 05:09 PM IST
ஓரம்போ ஓரம்போ…டெல்லியில் சிஎஸ்கே வீரர்கள் வந்த பஸ்ஸை சூழந்து கொண்ட ரசிகர்கள்!

சுருக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வந்த பஸ்ஸை ரசிகர்கள் சூழ்ந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாக ஐபிஎல் 16ஆவது சீசனும் முடியப் போகிறது. ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதையடுத்து, 2, 3 மற்றும் 4ஆவது இடங்களுக்கான போட்டியில் சென்னை, லக்னோ, மும்பை, ராஜஸ்தான், பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் போட்டி போட்டு வருகின்றன.

WTC Final: முதுகு வலியால் அவதிப்படும் ரவிச்சந்திரன் அஸ்வின்: இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கு சிக்கல்?

இதில், இன்று டெல்லியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 67ஆவது ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. இதற்காக சென்னை வீரர்கள் மைதானத்திற்கு பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் வந்த பஸ்ஸை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் தோனி, தோனி என்றும், சிஎஸ்கே என்றும் கோஷமிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

9ஆவது முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறிய பஞ்சாப்!

 

 

டெல்லிக்கு எதிராக தற்போது நடந்து வரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குள் 2ஆவது அணியாக செல்லும். இல்லையென்றால், ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் எடுத்து விளையாடி வருகிறது. தற்போது வரையில் சிஎஸ்கே ஒரு விக்கெட் இழப்பிற்கு 17.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஜெயித்தால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு: இல்லாட்டி நடையை கட்ட வேண்டியது தான்!

ஒரே சீசனில் மோசமான சாதனை படைத்த வீரர்களில் முதலிடம் பிடித்த ஜோஸ் பட்லர்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?