இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 – இந்தியா போராடி தோல்வி – ஷஃபாலி வர்மா ஆறுதல் அரைசதம்!

Published : Dec 06, 2023, 10:58 PM IST
இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 – இந்தியா போராடி தோல்வி – ஷஃபாலி வர்மா ஆறுதல் அரைசதம்!

சுருக்கம்

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணியானது 159 ரன்கள் எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது. டேனியல் வியாட் 75 ரன்களும், நாட் ஸ்கிவர் பிரண்ட் 77 ரன்களும் எடுத்தனர்.

Bangladesh vs New Zealand 2nd Test Day 1: வங்கதேசம் 172க்கு அவுட் – நியூசிலாந்து 55/5 ரன்கள் எடுத்து திணறல்!

பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 21 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரிச்சா கோஷ் 21 ரன்னில் வெளியேற கடைசி வரை ஒரே நம்பிக்கையாக இருந்த ஷஃபாலி வர்மா 42 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

டேனியல் வியாட், நாட் ஸ்கிவர் பிரண்ட் அதிரடி - இங்கிலாந்து மகளிர் அணி 197 ரன்கள் குவிப்பு!

இவரைத் தொடர்ந்து வந்த கனிகா அகுஜா 15 ரன்களில் வெளியேற, பூஜா வஸ்ட்ரேகர் 11 ரன்னும், தீப்தி சர்மா 3 ரன்னும் எடுக்கவே இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து மகளிர் அணியானது 1-0 என்று முன்னிலையில் உள்ளது.

நடிகை அவ்னீத் கவுருடன் சுற்றுலா சென்ற சுப்மன் கில் – வைரலாகும் புகைப்படம்!

இந்தப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். நாட் ஸ்கிவர் பிரண்ட், ஃப்ரேயா கெம்ப், சாரா கிளான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதில் நாட் ஸ்கிவர் பிரண்ட் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 2 அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி வரும் 9 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க இருக்கிறது.

Dhaka Test: பந்தை கையால் தடுத்து வித்தியாசமான முறையில் தானாகவே ஆட்டமிழந்த வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!