Sex Secret 7 : காலையில் சுய இன்பம் சரியா, தவறா என்ற குழப்பமா? மருத்துவ வல்லுநர்கள் சொல்லும் தகவல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சுய இன்பம் என்பது ஒரு இன்பமான அனுபவம் ஆகும்.அதை அளவோடு செய்தால், ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி நன்மைகள் பெற முடியும். வயது வந்த ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் கூட சுய இன்ப பழக்கத்திற்கு ஆளாவது என்பது இயல்பான உண்டு.
சுயஇன்பம் பற்றி பெரும்பாலானோர் வெளிப்படையாக பேசத் தயங்குவார்கள். நமக்கு நாமே உணர்வு கிளர்ச்சியை ஏற்படுத்தி சுகம் காண்பது தான் சுய இன்பம். ஆண்,பெண் இருவருமே சுய இன்பத்தில் ஈடுபடலாம். சுய இன்பம் காண செக்ஸ் பார்ட்னர் என்று யாரும் தேவையில்லை.
காலையில் சுய இன்பம் சரியா? தவறா, என்ற குழப்பமா? மருத்துவ வல்லுநர்கள் சொல்லும் தகவல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
1. காலையில் சுய இன்பம் கொள்வது, இதயத்தில் நல்லது சுய இன்பம் மூலமாக ஆண்களும் சரி பெண்களும் சரி அவர்களின் இதயத்திற்கு பல்வேறு நன்மைகளை அவர்களை அறியாமலேயே தேடிக் கொடுக்கின்றனர். சுய இன்பத்தால் மனச்சோர்வு குறைகிறது.
2. காலை நேரத்தில், சுய இன்பத்தில் ஈடுபடும் போது, நமது உடலில் ரத்த ஓட்டம் வேகமாகிறது. அந்த சமயத்தில் நமது இதயத் துடிப்பு சீராகி இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது. அதாவது சுய இன்பம் அனுபவிப்பது என்பது ஓர் உடற்பயிற்சியை போல நமது உடலுக்கு உதவுகிறது.
3. சுய இன்பத்திற்கு பிறகும் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் புத்துணர்ச்சி இருக்கும். சுய இன்பம் மூலமாக உச்சகட்டத்தை அடைந்துவிட்டால் அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
4. காலையில், சுய இன்பத்தில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கே தெரியாமல் தங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். உடலுறவாக இருந்தாலும் சரி சுய இன்பமாக இருந்தாலும் சரி உச்சகட்டத்தை அடையும் போது நமது உடலில் கார்டிசோல் அதிகமாகிறது. இந்த கார்டிசோல் என்பதுதான் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கான வினையூக்கி.
5. சுய இன்பம், பரஸ்பர சுய இன்பம் கர்ப்பம் மற்றும் பாலியல் நோய்த்தொற்றுகளைத் (STIs) தவிர்ப்பதற்கான நல்ல வழிகள்.
மருத்துவ ரீதியாக சுய இன்பம் இயற்கையானது. ஆனால் இது கலாச்சார ரீதியாக, செய்யக்கூடாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் பலரும் மிகுந்த குற்ற உணர்ச்சி, அவமானம் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் சுய இன்பம் செய்யும் யாரும் எந்தவித எதிர்மறையான எண்ணங்களுக்கு ஆளாக வேண்டாம். எவ்வித குற்ற உணர்வும் வேண்டாம். ஆனால், இதற்கு அடிமையாக கூடாது.
பொதுவாக பல்வேறு காரணங்களுக்காக பலர் அதிகமுறை சுய இன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இதனால் ஏதேனும் பிரச்சனை வருமா? என்ற கேள்வியையும் எழுகிறது. திருமணத்திற்கு பின் இது சிக்கல்களை ஏற்படுத்துமா? என்ற அச்சமும் பலருக்கு உள்ளது. அளவோடு இருந்தால் சுய இன்பம் நல்லது. அளவுக்கு மீறினால் பிரச்சனைதான். எனவே, அளவோடு பார்த்து கொள்ளுங்கள்.