முருங்கை டீ! தினமும் ஒரு முறை குடிங்க! சர்க்கரை நோயை விரட்டுங்க!

By thenmozhi gFirst Published Sep 24, 2018, 3:56 PM IST
Highlights

முருங்கைக் காய் தவிர அதன் இலை, பூ உள்ளிட்டவற்றின் கசப்புத் தன்மையால் நம் உணவில் இருந்து அவை அன்னியப்பட்டே இருக்கின்றன.

முருங்கைக் காய் தவிர அதன் இலை, பூ உள்ளிட்டவற்றின் கசப்புத் தன்மையால் நம் உணவில் இருந்து அவை அன்னியப்பட்டே இருக்கின்றன. ஆனால் ஊட்டச்சத்து உள்ளிட்ட அனைத்து நலன்களும் அந்த கசப்புத் தன்மைக்குப் பின்னால்தால் மறைந்திருக்கின்றன என்றால் மிகையல்ல. 

முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் விலகியே இருக்கும். வலிமையும் ஆரோக்கியமும் தேடித் துணைகொள்ளும். முருங்கையின் நன்மைகளைத் தான் சற்றுபார்ப்போமே 

முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.

கால்சியம், பொட்டாசியம் , ட்டமின் ஏ, சி ஆகியவை நிறைந்திருக்கின்றன. முருங்கைக் காய்கள், இலை, பூ மட்டுமன்றி, பட்டைகள், வேர்கள், விதை, முருங்கை பிசின் ஆகியவை நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ரத்தத்தில், கொழுப்புகள் மற்றும் குளுக்குாஸின் அளவைக் குறைக்கிறது.உடலுக்குள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். 

ஆரம்ப காலத்திலேயே சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து முற்றிலும் காப்பாற்றும். முருங்கை இலைகள், விதைகள், வேர்களில் காயங்களை ஆற்றும் தன்மைகள் உள்ளன.காயங்களில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறாமல் தடுக்கிறது. 

முருங்கை இலையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்டுகள் செல்களில் சேதத்தை தடுக்கிறது. மன அழுத்தம், வீக்கங்களை கட்டுப்படுத்துகிறது - உயிர் அணுக்கள் சேதமாவதைத் தடுக்கவும் உதவுகிறது. 

முருங்கை இலைப் பொடியில் பல்வேறு வகையான அழற்சி எதிர்ப்பு மூலக்கூறுகள் இருப்பதால் இதய நோய்கள் ஈ ஆர்த்தரிட்டிஸ், எடை அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு தீர்வாக உள்ளது.முருங்கை இலைப் பொடி மூளையின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் இ, வைட்டமின் சி ஆகியவை மன வளம், நினைவுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.

முருங்கை இலைப் பொடி ரத்தத்தில் உள்ள கொழுப்புகளைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.முருங்கை இலையில் பாக்டீரீயா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தி உள்ளது. இது தொல் நோய்த் தொற்றுகள், பாக்டீரியா பிரச்சினைகள் சிறுநீர்ப் பாதை தொற்றுக்களைப் போக்கவும் உதவுகிறது. 

முருங்கை இலையை உலர்த்தி, பொடி செய்து கிரீன் டீ போல, பயன்படுத்தலாம். அனால் முருங்கைப் பொடியை டீயில் ஒருநாளைக்கு அரை முதல் ஒரு தேக்கரண்டி மட்டுமே பயன்படுத்தவேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

click me!