திருமண விழாவுக்கு சென்ற சிறுமியை கடத்தி, கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து, பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேரை போலீஸ் கைது செய்துள்ளது. இந்த சம்பவம் சத்தீஷ்கரில் நடந்துள்ளது.
சத்தீஷ்கர் மாநிலம் ஜஸ்பூர் மாவட்டம் பகிச்சா பகுதியைச் சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 4 ஆம் தேதி அன்று திருமண
விழா ஒன்றுக்கு சென்றிருந்தார்.
அவர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
சிறுமியை மறைவான இடத்துக்கு கொண்டு சென்ற அவர்கள், கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்துள்ளனர். மயங்கிய நிலையில் அவரை பாலியல் பலாத்காரம்
செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதனிடையே சிறுமியைக் காணாததை அடுத்து அவரது பெற்றோரும், உறவினர்களும் தேடி வந்தனர். இந்த நிலையில் சிறுமி மயங்கிய நிலையில்
கண்டெடுக்கப்பட்டார். பின்னர், சிறுமியிடம் விசாரித்ததை அடுத்து, தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் கூறினார்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை அடுத்து, சிறுமி அடையாளம் காட்டிய 2 தோலி மற்றும் ஃபக்கல் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.