இந்த விவகாரம் விஜய்யின் தனிப்பட்ட குடும்ப விஷயம் என்றாலும், வரும் தேர்தலில் பெரும் அரசியல் மாற்றத்தை விஜய் ஏற்படுத்துவார் என பலரும் நம்புவதால் அவரது இமேஜை காலி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருப்பதாகவும், அந்த நடிகையுடன் அவர் வெளிநாடுகளில் சுற்றியதாகவும் சங்கீதா தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார். விஜய் அந்த நடிகையுடன் தொடர்பில் இருப்பது தனக்கும், தனது குழந்தைகளுக்கும் அவமானமாக இருப்பதாகவும், எவ்வளவோ சொல்லியும் திருமணத்துக்கு மீறிய உறவை விஜய் கைவிடவில்லை என்றும் சங்கீதா தெரிவித்துள்ளார்.
24
விஜய்யின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
விஜய்க்கும், அந்த நடிகைக்கும் தொடர்பு இருப்பதாகவும், இதனால் விஜய்யும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்வதாவும் கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், இதை உண்மை என அவரது மனைவியே நிரூபித்து விவாகரத்து கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், விஜய்யின் மனைவியே பெரும் குற்றம்சாட்டியுள்ளது திமுக, அதிமுக, நாதகவுக்கு லட்டு போல் வந்து சேர்ந்துள்ளது.
34
மனைவியை காப்பாத்த முடியாதவர் பெண்களை எப்படி காப்பார்?
இந்த விவகாரம் விஜய்யின் தனிப்பட்ட குடும்ப விஷயம் என்றாலும், வரும் தேர்தலில் பெரும் அரசியல் மாற்றத்தை விஜய் ஏற்படுத்துவார் என பலரும் கூறுவதால் அவரது இமேஜை காலி செய்யும் வகையில் அமைந்துள்ளது. சுடச்சுட இந்த விஷயத்தை கையில் எடுத்த திமுக, அதிமுக மற்றும் நாதகவினர், ''ஒரு கட்சியின் தலைவரே இப்படி இருப்பதால் அந்த கட்சியின் லட்சணம் தெரிகிறது. தனது மனைவியை முடக்கி விட்டு தமிழக பெண்களை விஜய் எப்படி பாதுகாப்பார்?'' என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தனிப்பட்ட விஷயம்
இதுதான் சான்ஸ் என மேற்கண்ட 3 கட்சிகளும் விஜய்யை பொளந்து கட்ட ஆரம்பிக்க, தவெகவினர் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ''இது நடிகர், கட்சி தலைவர் என்பதை விட ஒரு நபரின் தனிப்பட்ட குடும்ப விஷயம். ஆனால் தேர்தல் ஆதாயத்துக்காக திமுக உள்ளிட்ட கட்சிகள் இதை பேசுவது வெட்கமாக இல்லையா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் ''விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு இருப்பது தெரிந்து சங்கீதா விவாகரத்து கேட்டது அவர்களது குடும்ப விஷயம். தனிப்பட்ட விஷயம். ஆனால் இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்து தேர்தல் நெருங்கும் நேரத்தில் சங்கீதா நீதிமன்றம் சென்றது ஏன்?
இது சங்கீதாவே எடுத்த முடிவா? இல்லை விஜய்யின் இமேஜை காலி செய்ய 'மெகா' கட்சி தூண்டி விட்டு அவர் நீதிமன்றம் சென்றாரா? என்ற கேள்வி எழாமல் இல்லை. விஜய் மனைவி முடிவுக்கு பின்னால் அரசியல் சதி இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்'' என்றும் தவெகவினர் சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.