தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய், நேரடியாக மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதாவது வரும் 13ம் தேதி முதல் திருச்சியில் இருந்து விஜய் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்காக தவெக பொதுச்செயலாளர் விஜய், திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கோரி கடிதம் அளித்தனர். ஆனால் விஜய் பிரசாரத்துக்கு காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
விஜய் பிரசாரம் செய்யும் இடங்கள்
அதாவது சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை எனக்கூறிய காவல்துறை சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் பிரசார திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் இருந்து தொடங்கி டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா பகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.