இந்த நிலையில் இரு தரப்பிற்கும் இடையே அமைதி ஏற்பட தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று பாமக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், வன்னிய சமுதாயத்தில் எழுத படிக்க தெரியாமல் இருந்தார்கள். கை ரேகை தான் பதிவு செய்தார்கள். இன்று ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளேன். நீதிபதிகளை உருவாக்கியுள்ளேன்.
இந்திய அளவில் சமூக நீதியை பேசுவது நான் ஒருவன்தான். நான் மட்டும்தான் அதை பேச முடியும். என்னை விட்டால் வேறு யாரும் பேச முடியாது என கூறியவர், மற்றவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாது என கூறினார்.