அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சூர்யமூர்த்தி அதிமுக உறுப்பினரே அல்ல. உறுப்பினராக இல்லாத சூர்யமூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது எனவும் தெரிவித்தார். எனவே, உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும், வழக்கின் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்தும், சூர்யமூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.