MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!

ஸ்ரீநாராயண குரு பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 3 வட்டங்களுக்கு ஆகஸ்ட் 20ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் 13ம் தேதி பள்ளிகள் செயல்படும்.

1 Min read
vinoth kumar
Published : Aug 19 2025, 07:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பள்ளி மாணவர்கள்
Image Credit : Getty

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை என்று வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் தமிழகத்தில் அரசு விடுமுறையை தவிர்த்து இனி அனைத்து சனி, ஞாயிறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்தந்த மாவட்டங்களில் பண்டிகை மற்றும் கும்பாபிஷேகம், முக்கிய திருவிழாக்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

25
 உள்ளூர் விடுமுறை
Image Credit : our own

உள்ளூர் விடுமுறை

இந்த விடுமுறைக்கான உத்தரவை மாவட்ட அளவில் அந்தந்த ஆட்சியர்கள் முடிவு எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீநாராயண குரு பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 3 வட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
தமிழகம் முழுவதும் இன்று 5 முதல் 8 மணி நேரம் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்காணு பாருங்க! இதோ முழு விவரம்!
Related image2
கள்ளச்சாராயம் காட்சிபவர்களுக்கு ஒரு திமுக எம்எல்ஏவும்! விற்பவருக்கு ஒரு எம்எல்ஏவும் ஆதரவு! புது குண்டை தூக்கிப்போடும் அன்புமணி!
35
 கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்
Image Credit : our own

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்

இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

45
கல்வி நிறுவனங்கள் செயல்படும்
Image Credit : Google

கல்வி நிறுவனங்கள் செயல்படும்

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை அதாவது (13.09.2025) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி மேற்படி மூன்று வட்டங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும்.

55
அரசு அலுவலகங்கள்
Image Credit : our own

அரசு அலுவலகங்கள்

மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலவாணி முறிச் சட்டம் 1881-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் ஆகஸ்ட் 20ம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
விடுமுறை
பள்ளிகள் விடுமுறை
தமிழ்நாடு
கல்லூரி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved