வீர வசனம் பேசுறீங்களே! முதல்வர் வீட்டுக்கு சென்று பம்முனது யாரு? சீமானை கிழித்து எடுத்த விஜயலட்சுமி!

Published : Aug 19, 2025, 09:45 AM IST

செஞ்சிக் கோட்டை மீட்பு பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்களைத் தடுத்ததால் சீமான் ஆவேசமடைந்தார். இது குறித்து விஜயலட்சுமி சீமானை விமர்சிக்கும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

PREV
15

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார் தெரிவித்திருந்திருந்தார். இதனையடுத்து சீமானை விமர்சித்தும் அவருக்கும் எதிராக அவ்வப்போது விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டி வந்தார்.

25

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செஞ்சிக் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது சீமான் பேசிக் கொண்டிருந்த பொழுது செய்திகளைச் சேகரிப்பதற்காகச் செய்தியாளர்கள் வந்துள்ளனர். ஆனால் அங்கிருந்த பாதுகாவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி உள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை மேடையிலிருந்து பார்த்த சீமான் ஆவேசமடைந்து கீழே இறங்கி வந்து வாக்குவாதம் ஏற்படும் இடத்திற்குச் செல்ல முற்பட்டார். ஆனால் அதற்குள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சீமானைத் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பான வீடியோ வைரலானது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சீமான் சலசலத்திற்கும் சட்டத்திற்கும் அஞ்சுகின்ற திராவிட நரிகள் நாங்கள் கிடையாது எனவும் தவெக தலைவர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

35

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு குறித்து நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீமான் ஆவேசமாக கீழே இறங்கி ஒருத்தரை அடிச்சாரு.. பின்னர் மேடையில் ஏறி சலசலப்புக்கும் சத்தத்திற்கும் அஞ்சுகிற திராவிட நரிகள் இல்லை நாங்கள் என்று ஒரு வீர வசனத்தை பேசி இருந்தாரு.. சலசலப்பிற்கும் சத்தத்திற்கும் அஞ்சுகிற திராவிட நரிகள் நீங்கள் இல்லை என்றால் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் என்னுடைய வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்தார்கள்.

45

அப்போது இதேபோன்று தனியாக வந்து வழக்கை விசாரணையை சந்தித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஆடியோ மெசேஜ் போட்டு தம்பிகளா நாளைக்கு அண்ணனை விசாரணைக்கு கூப்பிட்டு இருக்காங்க எல்லாரும் வந்துருங்க.. அப்படின்னு சொன்னீங்களே.. அது என்ன? அதுக்கும் இந்த வீர வசனத்திற்கும் செட் ஆக மாட்டேங்குதே? சலசலப்புக்கும், சத்தங்களுக்கும் அஞ்சாத திராவிட நரிகள் நீங்க இல்லனா தமிழ்நாடு காவல்துறை உங்களை விசாரணை கூப்பிட்ட போது வீரமா என்று எதிர் கொண்டிருக்க வேண்டும்.

55

பயந்து ஓடிபோய் ஏன் சுப்ரீம் கோர்ட்டில் போய் தடை வாங்கினீர்கள்? நீங்கதான் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்று பம்மிக்கொண்டு, முதல்வர் எனது அண்ணன் தயாளு அம்மா என்னுடைய அம்மா என்று உறவு கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்களே தவிர, அவர்கள் யாரும் உங்களுக்கு பயந்து அஞ்சி என்னுடைய தம்பி என்று உங்களிடம் யாரும் உறவு கொண்டாடலையே.. இந்த வீர வசனம் என்ன எனக்கு புரியவில்லை, பார்த்துக்கொண்டு இருக்கிறவர்கள் யாருக்காவது அந்த வீர வசனம் என்ன புரிஞ்சா எனக்கு கொஞ்சம் சொல்றீங்களா என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories