இதன் காரணமாக வெளியூர்களுக்கு சென்று வேலை தேடும் வாய்ப்பு குறைந்து சொந்த ஊரிலேயே வாய்ப்பானது உருவாகி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் இணைந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 23,08,2025, சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் மதியம் 3.00 மணிவரை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி, (தன்னாட்சி), (KKC), புதுக்கோட்டையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.