இந்த பேச்சு சமூகவலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸ் வழிவிடாமல் தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு எடப்பாடி பழனிசாமி மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான கேள்விக்கு மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி கூறுகையில்,
அவர் எங்கே போகிறாரோ அங்கு ஆம்புலன் வருவதாக தெரிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி, இதில் பெரும்பாலான பகுதியில் முக்கிய சாலையில் தான் தனக்கு ஆதரவை திரட்டுவதற்காக பொதுக்கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் 1330 ஆம்புலன்ஸ் உள்ளது. விபத்து , அனைத்துமே உயிர் காக்கும் சேவையை செய்து வருகிறது. எங்கையாவது விபத்து கிராம பகுதிகளாக இருந்தாலும், நகர பகுதிகளாக இருந்தாலும் உடனடியாக செல்கிறது.