உங்களை போல விசுவாசமாக உழைத்தால் உயர்ந்த பதவிக்கு வரலாம் என்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மீது விசுவாசம் இருந்திருந்தால் அவர் வகுத்த விதிகளின்படி தொண்டர்களால் தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் MLAக்களை விலைக்கு வாங்கி முதலமைச்சர் ஆனீர்கள், பொதுக்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பொதுச்செயலாளர் ஆனீர்கள். நீங்கள் உழைத்து முன்னேறிவரும் இல்லை, தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் இல்லை. அதனால் தான் மக்கள் உங்களுக்கு தொடர்ந்து வெற்றி வாய்ப்பை கொடுக்க மறுக்கிறார்கள். இதை புரிந்துகொண்ட இனிமேலாவது கட்சிக்கும், கட்சிக்காரர்களுக்கு விசுவாசமாக இருங்கள், கட்சியை ஒன்றுபடுத்தி வலிமைப்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.