சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும். கூடுதல் தொகுதி வேண்டும் என காங்கிரஸ் திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணிக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் வெடித்து வருகிறது.
பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்
மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி, ''மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற காங்கிரஸ்காரர்கள் அதில் பங்கு வேண்டும். இதில் பங்கு வேண்டும் என கேட்கிறார்கள். இதையெல்லாம் தலைமை புரிந்து அவர்களுக்கு சீட் கொடுக்க கூடாது. காங்கிரஸுக்கு ஒரு தொகுதிக்கு 3,0000, 4,000 ஓட்டுகள் தான் உள்ளது. வார்டுகளில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்.'' என்றார்.