இதன்பின்பு வந்த வாஷிங்டன் சுந்தர் (1) தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். கடைசியில் ரன் வேகம் சற்று தளர்ந்த நிலையில், கேப்டன் கே.எல்.ராகுல் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசி
சூப்பர் அரை சதம் அடித்து ரன் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 43 பந்தில் 6 பவுண்டரி, சிக்சர்களுடன் 66 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 27 பந்தில் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
20 வைடுகளை வீசிய தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா தரப்பில் யான்சன் 2 விக்கெட்டுகளையும், பர்கர், லுங்கி இங்கிடி தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். தெனனாப்பிரிக்கா பவுலர்கள் எக்ஸ்டிரா வகையில் 24 ரன்களை வாரி வழங்கியுள்ளனர். இதில் 20 வைடுகள் வீசியிருப்பது குறிப்பிடத்தக்கது.