முதல் ஓடிஐயில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்த ருத்ராஜ், 2வது ஓடிஐயில் தனது திறமை என்ன என்பதை நிரூபித்துள்ளார். மற்றொருபுறம் முதல் ஓடிஐபோல் அசத்தலாக விளையாடி வரும் கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி சதத்தை நெருங்கி வருகிறார்.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி தாங்கள் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்பேரில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், ரோகித் சர்மா 14 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த ருத்ராஜ் கெய்க்வாட்டும், விராட் கோலியும் சூப்பராக விளையாடி அணியின் ஸ்கோரை உச்சத்துக்கு கொண்டு வந்தனர்.