
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து மகளிர் அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் 2ஆவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், இந்திய மகளிர் அணி 80 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மும்பையில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ஹீதர் நைட் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். SA vs IND 1st T20:தொடர் மழை – டாஸ் போட முடியாத நிலையில் SA vs IND First T20 போட்டி ரத்து: ரசிகர்கள் ஏமாற்றம்!
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீராங்கனைகள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹீதர் நைட் நிதானமாக விளையாடி 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 126 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து – திருப்பி கொடுத்த ஹர்மன்ப்ரீத் அண்ட் கோ!
எமி ஜோன்ஸ் 25 ரன்கள் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இங்கிலாந்து மகளிர் அணியானது 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. U19 Asia Cup 2023: அசான் அவாய்ஸ் சதம் அடித்து சாதனை – பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா யு19 அதிர்ச்சி தோல்வி!
பவுலிங்கை பொறுத்த வரையில் இந்திய மகளிர் அணியில் சைகா இஷாக் மற்றும் பிரியங்கா பாட்டீல் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரேணுகா சிங் மற்றும் அமன்ஜோத் கவுர் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். டர்பனில் மழை; டாஸ் போடுவதில் சிக்கல் – SA vs IND முதல் டி20 போட்டி மழையால் ரத்தாக வாய்ப்பு!
பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணிக்கு தொடக்க வீராங்கனையான ஷஃபாலி வர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து நிதானமாக விளையாடினர். இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கொடுத்த இங்கிலாந்து – கடைசி டி20 போட்டியில் வெற்றி பெறுமா இந்திய மகளிர் அணி?
இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தீப்தி சர்மா 11 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 12 ரன்களில் வெளியேறினார். அப்போது இந்திய அணி 153 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து நிதானமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 48 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஆனால், அவர் இந்தப் போட்டியின் மூலமாக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக 100 பவுண்டரி அடித்துள்ளார். டி20 போட்டியில் ஒரு அணிக்கு எதிராக அதிக பவுண்டரி அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா 3ஆவது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக, மெக் லானிங் 124 பவுண்டரிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
பெத் மூனி 111 பவுண்டரிகளுடன் 2ஆவது இடத்தில் நீடிக்கிறார். நான்காவது இடத்தில் சுசி பேட்ஸ் 100 பவுண்டரிகளுடன் இருக்கிறார். ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து வந்த ரிச்சா கோஷ் 2 ரன்களில் நடையை கட்ட கடைசியாக ஹர்மன்ப்ரீத் கவுர் 6 ரன்கள் மற்றும் அமன் ஜோத் கவுர் 10 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.
இறுதியாக இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய மகளிர் அணி 1-2 என்று இழந்துள்ளது. இந்த டி20 தொடரைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி வரும் 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையில் நடக்கிறது.