marraige
ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும், கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் பிறக்கும் பிள்ளைக்கும், பிரசவிக்கும் தாய்க்கும் உடல் நலம் கெடும், அதனால்தான் புதுமணத் தம்பதியர் பிரித்து வைக்கப்படுகிறார்கள் என்று அறிவியல் ரீதியாகவும் காரணம் சொல்லப்படுகிறது. ஆடி மாதம் சிறப்பு பெறுவதுடன், அம்மனுக்கு உகந்த மாதமாகவும் வழிபடப்படுகிறது. இன்று கிரகங்களின் அரசனான சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால், ஆடி மாதம் ஜூலை 17 பிறக்கிறது. எனவே, இந்த மாதத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
marraige
எனவே, தான் புதுமணத் தம்பதிகள் ஆடி மாதம் தொடங்கியதும் பெண் அவளது பிறந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுவது வழக்கமாக உள்ளது. மேலும், ஒரு சில வழக்கத்தில் திருமணமான ஜோடிகளின் முதல் ஆடி மாதமாக இருந்தால், பெண்ணை அவர் பெற்றோரின் வீட்டுக்கு கொண்டு வந்து விடுவார்கள். அந்த நேரத்தில், புதிய ஜோடிகளுக்கு ஆடி ஒன்றாம் தேதி விருந்து வைக்கும் பழக்கமும் உண்டு.