Fridge: பச்சைப் பாலை வாங்கியதும் பிரிட்ஜில் வைக்கிறீர்களா? 200 நோய்களை கொண்டு வரும் ஆபத்து.!

Published : Jun 23, 2026, 10:33 AM IST

Refrigerating Raw Milk: முன்பெல்லாம் பாலை வாங்கியது அதை உடனே காய்ச்சி வைத்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்துவார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பாலை வாங்கியவுடன் அப்படியே காய்ச்சாமல் பிரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

PREV
15
பச்சை பால் பிரிட்ஜில் வைக்கலாம்

தமிழ்நாட்டில் பசு பால் குடிப்பது நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக உள்ளது. முன்பெல்லாம் பாலை வாங்கியது அதை உடனே காய்ச்சி வைத்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்துவார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பாலை வாங்கியவுடன் அப்படியே காய்ச்சாமல் பிரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் பலரிடமும் அதிகரித்துள்ளது. மருத்துவ ரீதியாக இது பல்வேறு ஆபத்தைகளை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Cobra Village: பாம்புகளோடு குடும்பம் நடத்தும் மனிதர்கள்! கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் கோப்ரா சிட்டி.. மிரள வைக்கும் பின்னணி!

25
காய்ச்சாத பாலில் 5 நாட்கள் வாழும் வைரஸ்

அதுமட்டுமல்லாமல் மாடுகளுக்கோ அல்லது எருமைகளுக்கோ ஏதேனும் தொற்று இருந்தால், அதன் பாதிப்பு பாலிலும் இருக்கும். பாலைச் சரியாகக் காய்ச்சாமல் அப்படியே குளிரூட்டும்போது அதில் உள்ள வைரஸ்கள் அழியாமல் உயிர்ப்போடு இருக்கும். காய்ச்சாத பச்சைப் பாலை பிரிட்ஜில் வைத்தால், காய்ச்சலை உண்டாக்கக்கூடிய இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் 5 நாட்கள் வரை அதில் உயிரோடு இருக்கும் என அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது.

35
மனிதர்களை தாக்கும் வைரஸ்

தற்போது பருவ காலத் தொற்றுகள் பரவி வரும் நிலையில், மாடுகளுக்குப் பறவைக் காய்ச்சல் பரவும் வாய்ப்புகளும் உள்ளன. பச்சைப் பாலை அப்படியே குடிப்பதாலோ அல்லது சரியாகக் காய்ச்சாமல் பயன்படுத்துவதாலோ இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்கக்கூடும். இதனால் காய்ச்சிய பாலை தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும். ஃப்ளூ வைரஸின் ஆர்என்ஏ பச்சைப் பாலில் 57 நாட்கள் வரை நீடித்திருக்க வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

45
பச்சைப் பாலில் அதிக சத்து உள்ளதா?

காய்ச்சாத பச்சைப் பால் குடிப்பதால் பறவைக் காய்ச்சல் வரும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் அதில் ஒருவேளை வைரஸ் இருந்தால் உங்களை தாக்கக் கூடும். பாலை கொதிக்க வைப்பது அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்களை நீக்கும் செயல்முறை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பச்சை பால் அருந்தினால் நோய்த்தொற்று வரலாம்.

Fridge: உங்க வீட்டு ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் மலை போல் ஐஸ் கட்டியிருக்கா? கரண்ட் பில் எகிறாமல் தடுக்க.. இதோ சிம்பிள் டிப்ஸ்!

55
200-க்கும் மேற்பட்ட நோய்த்தொற்று அபாயம்

காய்ச்சிய பாலை விட பச்சைப் பாலில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோபயோடிக்ஸ்கள் இருப்பதாகச் சிலர் தவறாக நம்புகின்றனர். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் இதில் எவ்வித உண்மையும் இல்லை. காய்ச்சாத பச்சைப் பாலை அப்படியே குடிப்பதன் மூலம் 200-க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. காய்ச்சாத பச்சை பாலில் ஈ. கோலை, சால்மோனெல்லா உள்ளிட்ட பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த பாக்டீரியாக்கள் குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், நோயெதிர்ப்பு சக்தி பலவீனமானவர்களுக்கு நோய் உண்டாக்கும் அபாயம் உள்ளது. ஃப்ளூ வைரஸின் ஆர்என்ஏ 57 நாட்கள் வரை பச்சைப் பாலில் இருக்க வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories