monsoon cough : மழைக்கால இருமல்: டாக்டர் சீட்டு இல்லாம மருந்து கிடைக்காதுனா மக்கள் டாக்டர்கிட்ட போவாங்களா?

Published : Aug 05, 2026, 08:44 PM IST

மழைக்காலத்தில் இருமல் மற்றும் சளி ஏற்படுவது இயல்பு. ஆனால், மருத்துவர் பரிந்துரை சீட்டு (Prescription) இன்றி இருமல் மருந்து தரக்கூடாது என்ற நடைமுறை குறித்த மக்களின் கருத்துகள், சுய மருத்துவத்தின் ஆபத்துகள் மற்றும் பாதுகாப்பான வழிமுறைகள் பற்றிய பார்வை.

PREV
16
மழைக்காலமும் பரவும் இருமலும் :

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே சளி, இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் கட்டுக்கடங்காமல் பரவத் தொடங்கும். காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதும், வைரஸ் தொற்றுகள் வேகமாகப் பரவுவதும் இதற்குக் முக்கியக் காரணமாகும். பெரும்பாலான மக்கள் இதை சாதாரணப் பிரச்சனையாகவே கருதுகிறார்கள்.

26
மருத்துவர் பரிந்துரை சீட்டு (Prescription) ஏன் கட்டாயம்?

சமீபகாலமாக சில இருமல் மருந்துகளில் உள்ள ஆபத்தான வேதிப்பொருள்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகள் காரணமாக, மருத்துவரின் சீட்டு இல்லாமல் (Over-The-Counter) கடைகளில் இருமல் மருந்துகள் விற்பனை செய்யக் கூடாது என்ற கெடுபிடிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. முறையான அளவின்றி மருந்துகளை உட்கொள்வது கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கலாம் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

36
மக்கள் என்ன சொல்கிறார்கள்?

"சின்ன இருமலுக்கு மருத்துவமனை சென்று கட்டணம் செலுத்துவதும், நேரத்தைச் செலவழிப்பதும் நடைமுறைக்குச் சாத்தியமில்லை."

"தவறான சிரப் குடித்து உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்வதை விட, மருத்துவரைச் கலந்தாலோசிப்பதே பாதுகாப்பானது."

46
சுய மருத்துவம் (Self-Medication) செய்வதில் உள்ள ஆபத்துகள் :

மருந்தகங்களில் நாமாகச் சென்று வாங்கிப் குடிக்கும் இருமல் மருந்துகள் தற்காலிக நிவாரணம் தந்தாலும், அவை பின்வரும் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும்:

இருமலின் உண்மையான காரணத்தைக் கண்டறிய முடியாமல் போவது ( ஆஸ்துமா, ஒவ்வாமை அல்லது நுரையீரல் தொற்று).

தேவையற்ற பக்கவிளைவுகள் மற்றும் தூக்க கலக்கம்.

ஆண்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் "மருந்து எதிர்ப்புத் திறன்" (Antimicrobial Resistance).

56
எப்போது கண்டிப்பாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும்?

சாதாரண இருமல் சில நாட்களில் சரியாகிவிடும். ஆனால் பின்வரும் அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரைச் சந்திக்க வேண்டும்:

இருமல் 2 வாரங்களுக்கு மேல் நீடித்தால்.

காய்ச்சல், மூச்சுத்திணறல் அல்லது நெஞ்சு வலி இருந்தால்.

சளியில் ரத்தம் கலந்து வந்தால்.

இரவு நேரங்களில் இருமல் அதிகமாகி தூக்கத்தைக் கெடுத்தால்.

66
மழைக்கால இருமலுக்கு பாதுகாப்பான எளிய வீட்டு வைத்தியங்கள் :

மருத்துவரிடம் செல்லும் வரை அல்லது ஆரம்பகட்ட நிவாரணத்திற்கு பாதுகாப்பான இயற்கை முறைகளைப் பின்பற்றலாம்:

மிதமான வெந்நீர்: தொண்டைக்கு இதமளித்து, கிருமிகளைக் கட்டுப்படுத்தும்.

மிளகு - மஞ்சள் பால்: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

இஞ்சி மற்றும் தேன்: தொண்டை எரிச்சலையும் இருமலையும் குறைக்கும் சிறந்த இயற்கை மருந்து.

ஆவி பிடித்தல் (Steam Inhalation): மூக்கு அடைப்பு மற்றும் நெஞ்சு சளியை இளக்க உதவும்.

Read more Photos on
click me!

Recommended Stories