இந்தியாவில் 10ல் 9 பேருக்கு ஆபத்து.! Silent Killer பற்றி ICMR வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published : Jul 22, 2026, 05:56 PM IST

Cholesterol Crisis Affecting 90 Percent of Indian Adults: இந்தியாவில் 10ல் 9 பேருக்கு ஆபத்து இருப்பதாக ICMR-ன் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக 30 வயது இளைஞர்களையே அதிகம் குறிவைக்கும் இந்த சைலன்ட் கில்லர் பற்றிய அதிர்ச்சி ரிப்போர்ட் இதோ.

PREV
17
Cholesterol Crisis Affecting 90 Percent of Indian Adults

இந்தியாவில் மாரடைப்பு வழக்குகள் திடீரென அதிகரிக்க என்ன காரணம் என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. இந்திய பெரியவர்களில் அசாதாரண கொலஸ்ட்ரால் அளவு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதாக ICMR தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சைலன்ட் கில்லர் நோய் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இங்கே.

இதையும் படியுங்கள் -  EB Bill: கரண்ட் பில் அதிகமா வந்துடுச்சா? உடனே இத பண்ணுங்க.! இல்லைனா பெரிய நஷ்டம் உங்களுக்கு தான்.!

27
1. 10ல் 9 பேருக்கு இதே சிக்கல்!

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 23,665 பெரியவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பத்தில் ஒன்பது பேருக்கு அதிக கொலஸ்ட்ரால் அல்லது அசாதாரண லிப்பிட் அளவு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவ மொழியில் இதை 'டிஸ்லிபிடெமியா' (Dyslipidemia) என்று அழைக்கிறார்கள்.

இதையும் படியுங்கள் -  சுவிட்ச் போர்டில் 24 மணி நேரமும் ரெட் லைட் எரிந்தால் EB பில் ஏறுமா? உண்மை என்ன? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!

37
2. டிஸ்லிபிடெமியா... அப்படின்னா என்ன?

ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அல்லது ட்ரைகிளிசரைடுகளின் அளவு மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருந்து, இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் நிலைதான் டிஸ்லிபிடெமியா. ஆரம்ப கட்டத்தில் எந்த அறிகுறிகளும் தெரியாததால், மக்கள் இதை அலட்சியம் செய்கிறார்கள். இதுவே பின்னர் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும்.

இதையும் படியுங்கள் -  RO Water Purifier: ஃபில்டர் தண்ணி குடிச்சா கிட்னி பாதிக்குமா? டாக்டர்ஸ் சொல்றது என்ன?

47
3. 30 வயதிலேயே தொடங்கும் ஆபத்து!

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வந்த இந்த பிரச்சனை, இப்போது 30 வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் இளைஞர்களிடமே அதிகமாகக் காணப்படுகிறது. சர்க்கரை நோய், உடல் பருமன் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கட்டாயமாகவும் regular-ஆகவும் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படியுங்கள் -  அம்பானி வீட்ல வேலை வேணுமா? அரசு வேலையை விட கடினமாம்.! என்ன தகுதிகள் இருக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க.!

57
4. ரத்தக் குழாய்களுக்கு ஏற்படும் பாதிப்பு

அசாதாரண கொலஸ்ட்ரால் உடனடியாக எந்த வலியையும் ஏற்படுத்தாது. ஆனால், காலப்போக்கில் ரத்தக் குழாய்களின் சுவர்களில் கொழுப்பு படிந்துவிடும். இதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் (Stroke) ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

இதையும் படியுங்கள் -  Interesting Facts: சோப்பு கலர் கலரா இருந்தாலும், நுரை மட்டும் ஏன் வெள்ளையா இருக்கு?

67
5. யாருக்கு இந்த பாதிப்பு அதிகம்?

இந்தப் பிரச்சனை பெண்கள், நகர்ப்புறவாசிகள் மற்றும் மத்திய இந்திய மக்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பலருக்கும் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவு மிகக் குறைவாக இருப்பதுதான்.

இதையும் படியுங்கள் -  Aadi Masam 2026: தீராத கடன் பிரச்சனைகள் தீர, ஆடி இரண்டாவது செவ்வாய்கிழமை செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடுகள்.! தேச மங்கையர்கரசி சொன்ன ரகசியம்.!

77
எந்தப் பகுதியில் பாதிப்பு அதிகம்?
மத்திய இந்தியாவில் அதிகபட்சமாக 89.1% பேருக்கு இந்தப் பிரச்சனை உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இது 85.3% ஆக இருக்கிறது. சீரான இடைவெளியில் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்வதும், வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்வதும் மட்டுமே இந்தப் பிரச்சனையிலிருந்து தப்பிக்க ஒரே வழி.
Read more Photos on
click me!

Recommended Stories