- முதலில் பட்டாணியை இரவு முழுவதும் ஊற வைத்து, காலை அதனை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கி, பின் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- தக்காளி சேர்த்து மென்மையானதாக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கறி மசாலா சேர்த்து மசாலாவின் நறுமணம் வெளிவரும் வரை வதக்கவும்.
- அதில் வேக வைத்த பட்டாணியை சேர்த்து, தேவையான அளவு நீர் சேர்த்து 5-10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
- இறுதியாக, தேங்காய்ப் பால் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். தீயை அணைத்து விட்டு, கருவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கலாம்.