முதலில் ஒரு கடாயில் வேர்க்கடலையை போட்டு மிதமான தீயில் வறுக்கவும். வேர்க்கடலை லேசாக நிறம் மாறி நல்ல வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். வறுத்த வேர்க்கடலையை ஆற வைத்து, கைகளால் தேய்த்து தோலை நீக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு பூண்டு, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கி லேசாக நிறம் மாறினால் போதும். அதனுடன் உப்பு, புளி, சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் வேர்க்கடலையுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். சட்னி மிகவும் கெட்டியாகவோ அல்லது மிகவும் நீர்த்ததாகவோ இல்லாமல், சரியான பதத்தில் இருக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றவும். சுவையான கேரள பாணி வேர்க்கடலை சட்னி தயார்.