இட்லி மாவு அரைக்க டிப்ஸ்!
1). இட்லி மாவு அரைத்த பின் அதில் உப்பு போட்டு புளிக்க வைக்க வேண்டும். இதனால் இட்லி பஞ்சு போல பொசு பொசுவென வரும்.
2). மாவு நன்கு புளித்துவிட்டால் அதை கலக்கிவிடாமல் அப்படியே இட்லி ஊற்ற வேண்டும். இப்படி செய்தால் இட்லி மென்மையாக இருக்கும்.
3). இட்லிக்கு அரைக்கும் மாவில் உளுந்த மாவு எப்போதும் புளித்து போகக் கூடாது.
4). இட்லிக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும்போது 4 கப் அரிசி போட்டால் ஒரு கப் உளுந்து என ஊற வைத்து அரைக்க வேண்டும். அப்படி அரைப்பதால் இட்லி நன்றாக வரும்.
5). இட்லி மாவு கரைக்கும்போது கல் உப்பு போடவேண்டும். இந்த மாவு ரொம்ப தண்ணீராக அல்லது கெட்டியாக இருக்கக் கூடாது. நடுநிலை பதத்தில் இருக்கலாம். இட்லி மாவை கரண்டியில் எடுக்கும்போது ரிப்பனை போல நீளமாக தட்டில் விழுவது தான் இட்லி மாவு பதம்.
6). வெறும் அரிசி ,உளுந்து மட்டுமின்றி ஜவ்வரிசி ஊறவைத்தும் இட்லி மாவு அரைக்கலாம். இந்த மாவில் இட்லி அவித்தால் பொசுபொசுவென இருக்கும்