குழந்தை பிறந்த உடன், சில தாய்மார்களுக்கு மிகவும் தாமதமாகவே பால் சுரக்கும். தவிர்க்க முடியாத நேரத்தில் பார்முலா பால் பயன்படுத்தினாலும், குழந்தைக்கு கட்டாயமாக 6 மாதத்திற்கு தாய் பால் தான் கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை தூண்டும். மருத்துவர்களும் தொடர்ந்து இதை தான் வலியுறுத்தி வருகிறார்கள்.
தாய் பால் சுரப்பதற்கு, தாய்மார்கள் அதிக அளவில் உணவு எடுத்து கொண்டாலும்... அதில் பால் சுரப்புக்கு தேவையான சில உணவுகளையும் சேர்த்து கொள்வது சிறந்தது. பால் அதிகமாக சுரக்க செய்யும் சில உணவுகள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.