குழந்தைகள் விஷயத்தில் சவால் விட்டு சிக்கிய எழில்.! அசிங்கப்பட்டது தான் மிச்சம்.. நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

First Published May 7, 2024, 8:40 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மனோகரி அஞ்சலியை பிரிக்க நினைக்க சுடர் பொங்கி எழுந்து அவளுக்கு பதிலடி கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
 

அதாவது, அஞ்சலி தூங்காமல் எழுந்து வந்து நான் உன்கூட தான் தூங்குவேன் என்று சுடர் ரூமுக்கு வருகிறாள். சுடர் நான் பக்கத்தில் தான் இருக்கேன்... நீ அங்க போய் உன் ரூமில் தூங்கு, இல்ல மேல போய் மத்தவங்களோட சேர்ந்து தூங்கு என்று சொல்ல அஞ்சலி நான் உன் கூட தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கிறாள்.

இதற்க்கு சுடரும் சம்மதம் சொல்ல, அவர்கள் சோகமாக இருப்பதை பார்த்து அஞ்சலி நான் ஒரு கதை சொல்லட்டுமா என்று கதை சொல்லி சுடரை சிரிக்க வைக்க, இருவரும் சிரிக்கும் சிரிப்பு சத்தத்தை கேட்டு அஞ்சலி டைம் ஆச்சுல இன்னும் இங்க என்ன பண்ற ரூமுக்கு போ என்று திட்டி அஞ்சலி அழவைத்து மேலே அனுப்பி வைக்கிறான் எழில் . 

DNA First Look: நடிகர் அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு ’டிஎன்ஏ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
 

இதனால் சுடர் உங்களால குழந்தைங்க உலகத்துக்குள்ள வரவே முடியாது. கோவப்பட மட்டும் தான் தெரியும் என்று திட்ட,  எழில் குழந்தைகளை என்னுடைய கண்ட்ரோலுக்குள் கொண்டு வர முடியும். என்னால குழந்தைங்கள பாத்துக்க முடியும். ஒரே வாரத்துல செய்து காட்டுறேன் என்று சவால் விடுகிறான். 

மறுநாள் காலையில் சுடருக்கு முன்பாக ரூமுக்கு வந்த எழில், குழந்தைகளை எழுந்திருங்க என்று சொல்லிவிட்டு வெளியே வர சுடர் சொன்னா தான் அவங்க எழுந்திரிபங்களா? போய் பாருங்க என்று சொல்ல எழில் திரும்பி ரூமுக்கு வர எல்லோரும் தூங்கிக் கொண்டே இருக்கின்றனர். 

Selvaraghavan: தனுஷே அடிவாங்குவான்..! செல்வராகவனை பார்த்தாலே பயந்து நடுங்குவாங்க... பிரபலம் கூறிய தகவல்!

பிறகு எழில் எல்லோரையும் எழுப்பி குளிக்கணும் என்று சொல்ல, அஞ்சலி சுடர் தான் குளிக்க வைப்பா என்று சொல்கிறாள். இன்னைக்கு நான் குளிக்க வைக்கிறேன் என்று அவளை கூட்டிச் செல்லும் எழில் கடைசியில் நனைந்து வருவதை பார்த்து சுடர் சிரிக்கிறாள். கொஞ்ச நேரத்தில் கவினை குளிக்க வைக்க மறந்துட்டீங்க என்று எழிலுக்கு ஞாபகப்படுத்தி கலாய்க்க, அவன் கவினை குளிக்க வைக்க கூட்டி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

click me!