உல்லாசமாக இருந்த போது தகராறு.! ஆத்திரத்தில் கள்ளக்காதலியை கொன்றுவிட்டு கள்ளக்காதலன் என்ன செய்தான் தெரியுமா?

First Published Sep 3, 2023, 11:11 AM IST

காட்டு பகுதியில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளை அடித்து சென்ற வழக்கில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் துரிஞ்சிகுப்பம் வனப்பகுதியில்  கடந்த வியாழக்கிழமை  மங்கம்மா (52) என்ற பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் மங்கம்மாவுக்கும் அவரது சொந்த ஊரான துரிஞ்சிகுப்பத்தை சேர்ந்த சங்கர்(37) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. 

இந்நிலையில் சங்கர்(37) மங்கம்மாளும்  ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் தனியாக சந்திக்கொண்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சங்கர் தூண்டினால்  மங்கம்மாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த செல்போன் மற்றும் கம்மல், தாலி உள்ளிட்ட நகைகளை கொள்ளை அடித்து சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். 

click me!