ஆற்றங்கரையோரம் கிடந்த மனித உடல்பகுதி.. வெற்றி துரைசாமியின் நிலை என்ன? வெளியான பரபரப்பு தகவல்..!

First Published Feb 7, 2024, 7:57 AM IST

சைதை துரைசாமியின் மகன் தேடுதலின் போது ஆற்றின் கரை ஓரம் இருந்த பாறையில் மனித உடல்பகுதி கிடைத்துள்ளதாகவும், அது காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் பாகமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 

Saidai Duraisamy

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது ஒரே மகன் வெற்றி துரைசாமி (45). சினிமா துறையிலும் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தனது நண்பர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலாவை முடித்து விட்டு சென்னை திரும்புவதற்காக இன்னோவா காரில் விமான நிலையத்துக்கு புறப்பட்டார். 

Satluj River

கார் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்துக்கொண்டிருந்த போது திடீரென கார் ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், கார் சாலையில் தாறுமாறாக ஓடி மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், காரில் பயணம் செய்த சைதை துரைசாமியின் நிலை என்ன என்பது தெரியாமல் தீவிர தேடுதல் வேட்டையில் இந்திய விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க: சட்லஜ் ஆற்றில் பாய்ந்த கார்.! சைதை துரைசாமியின் மகன் மாயம்.. தேடும் பணி திடீர் நிறுத்தம்.. கைவிரித்த போலீஸ்.!

Saidai Duraisamy Son Vetri Duraisamy

இந்த தகவலை அறிந்ததும் இமாசல பிரதேசத்திற்கு சைதை துரைசாமி புறப்பட்டு சென்றார். மேலும், தனது மனிதநேய அகாடமியில் படித்த இமாச்சலபிரதேச மாநிலத்தில் ஐஏஸ், ஐபிஎஸ்.,களாக பணியாற்றி வருகின்றவர்களையும் தொடர்புகொண்டுள்ளார். உடனடியாக அவர்கள் மீட்புப் பணியை துரிதப்படுத்தினார்கள். அப்படி இருந்த போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் வெற்றி துரைசாமி குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 1 கோடி வழங்கப்படும் என்றும் சைதை துரைசாமி அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க:  மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு.. சைதை துரைசாமி வேதனையுடன் அறிவிப்பு.!

Himachal Pradesh Police

இந்நிலையில், தேடுதலில் போது ஆற்றங்கரையில் இருந்து மனித உடல் பகுதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் பாகமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் இன்னொரு புறம் இமாசல பிரதேச போலீசார் வெற்றி துரைசாமியை தொடர்ந்து தேடி வருகின்றனர். என்.டி.ஆர்ப், ஐடிபிபி, ஊர்க்காவல் படை, காவல்துறையினர் உள்ளிட்டோர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!