50 வயதிலும் பட்டுச் சேலையில் பளபளவென ஜொலிக்கும் அனிதா விஜயகுமாரின் கலர்ஃபுல்லான நவராத்திரி கிளிக்ஸ் இதோ

First Published Oct 17, 2023, 10:36 AM IST

நவராத்திரியை ஒட்டி நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா பட்டுச் சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

anitha vijayakumar

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜயகுமார். இவருக்கு மஞ்சுளா மற்றும் முத்துக்கண்ணு என இரண்டு மனைவிகள், இதில் மூத்த மனைவி முத்துக்கண்ணுக்கு பிறந்தவர் தான் அனிதா. விஜயகுமார் குடும்பத்தில் இருந்து சினிமா வாடையே படாமல் வளர்ந்த ஒரே ஒருவர் அனிதா தான். இவரைத்தவிர விஜயகுமாரின் வாரிசுகளான அருண் விஜய், வனிதா, கவிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என அனைவரும் சினிமாவில் நடித்துவிட்டனர்.

anitha vijayakumar Navaratri celebration

அனிதா விஜயகுமார் ஒரு டாக்டரும் கூட. இவருக்கு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தோஹாவில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு தியா என்கிற மகளும், கோகுல் என்கிற மகனும் உள்ளனர். சமீபத்தில் தான் அனிதா தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். 50 வயதானாலும் அழகில் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே போகும் அனிதா தற்போது ஒரு மாடலாகவே மாறிவிட்டார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 1லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

anitha vijayakumar Navaratri photos

சமீப காலமாக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அனிதா. அந்த வகையில் தற்போது நவராத்ரியை கொண்டாடும் விதமாக தினசரி ஒரு நிறத்தில் புடவை அணிந்து அதனை போட்டோஷூட் நடத்தி, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அது எந்த கடவுளை குறிக்கும் என்பதையும், அதற்கான விளக்கத்தையும் பதிவிட்டு வருகிறார்.

vijayakumar daughter anitha

முதல் இரு தினங்கள் ஆரஞ்ச் மற்றும் வெள்ளை நிறத்தில் புடவை அணிந்திருந்த அனிதா, நவராத்ரியின் மூன்றாம் நாளான இன்று சிகப்பு நிறத்தில் புடவை அணிந்து போட்டோஷூட் நடத்தி உள்ளார். சந்திரகாந்தா தேவிக்கு அர்ப்பணிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது என்றும், இந்த சிகப்பு நிறம் சக்தி மற்றும் பாதுகாப்பை குறிப்பதாகவும், இதன்மூலம் நேர்மறை எண்ணங்கள் நமக்குள் வருவதோடு, தைரித்தையும் வழங்குவதாக அனிதா குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்...டிக்கெட் புக்கிங்கிற்கே இப்படியா... கேரளாவில் விஜய் ரசிகர்கள் செய்த மாஸ் சம்பவம் - வைரலாகும் வீடியோ

click me!