Aranthangi nisha
விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆனவர் அறந்தாங்கி நிஷா. இதையடுத்து சினிமாவில் நகைச்சுவை நடிகையாக கலக்கி வரும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். சினிமா மற்றும் சின்னத்திரையில் பிசியாக நடித்து வரும் நிஷா, சமூக சேவை செய்வதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது களத்தில் இறங்கி மக்களுக்காக அவர் உதவி செய்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
ஈசியாக வார்த்தைகளால் காயப்படுத்திவிடுகிறார்கள். அதுவும் வார்த்தைகளால் கற்பழிப்பது கொடூரத்தின் உச்சம். பெண்கள் மீது தான் இதை திணிக்கிறார்கள். நான் எதை செய்தாலும் விளம்பரத்துக்காக செய்வதாக விமர்சிக்கிறார்கள். இதையெல்லாம் நான் விளம்பரத்துக்காக செய்து CM ஆக போகிறேனா? அல்லது PM ஆக போகிறேனா? மேடையில் பேசி, மக்கள் கொடுக்கும் பணத்தில் தான் சாப்பிடப்போகிறேன். மக்களுக்கு உதவ நினைப்பவர்களை காயப்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள். அந்த காயம் என் மனசை விட்டு ஆரவே இல்லை.
வேறு யாராவது செய்தால் புகழ்ந்து பேசுகிறீர்கள் ஆனால், பெண்கள் ஏதாவது உதவி செய்தால் மட்டும் ஏன் இப்படி கேவலப்படுத்துகிறீர்கள். இந்த கோபம் என் மனதுக்குள் நிறம்பி இருக்கிறது என ஆதங்கத்துடன் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார் அறந்தாங்கி நிஷா. சமீபத்தில் வெள்ளத்தில் தத்தளித்த மக்களுக்கு அவர் உதவி செய்ததை அவர் விளம்பரத்துக்காக மட்டுமே இப்படி செய்வதாக விமர்சித்து இருந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் அறந்தாங்கி நிஷா இவ்வாறு பேசி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... நெகட்டிவ் விமர்சனம் கிடைத்தாலும் கோடிக்கணக்கில் கல்லா கட்டும் சன்பிக்சர்ஸ்.. பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த ஜெயிலர்..