ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய கேரியரை துவங்கி, பின்னர்... ராஜ் டிவியில் தொகுப்பாளினியாக மாறியவர் பாவனா பாலகிருஷ்ணன். இதை தெடர்ந்து, விஜய் டிவி-யில் தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த பாவனா, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார்.
மற்ற தொகுப்பாளர்களுடன் இணைந்து, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் குறித்து இவர் பேசுகையில்... சிவகார்த்திகேயனுடன், நான் அதிகம் பேசியது இல்லை. நான் தொகுப்பாளராக இருக்கும் போது, அவர் விஜய் டிவியில் கண்ட்ஸ்டெண்டாக இருந்தார். அதன் பின்னரே என்னுடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க துவங்கினார். ஏனோ இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் எங்கள் இடையே ஒரு இடைவெளி இருந்தது. நான் அவருடன் மற்றவர்களிடம் பேசுவது போல் சகஜமாக பேச மாட்டேன்.
அதே போல் தொகுப்பாளர் விஜய், என்னை குருநாதா என்று தான் அழைப்பார். மிகவும் திறமையானவர். அவருடன் பல நிகழ்ச்சிகளை நான் தொகுத்து வழங்கி உள்ளேன் என கூறியுள்ளார்.
விஜய் டிவியை விட்டு கடந்த 2017-ம் ஆண்டு திடீர் என விலகிய பாவனா, அதன் பின்னர்... ஸ்டார் ஸ்போட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும் முதல் முறையாக விஜய் டிவியில் இருந்து விலகியது குறித்து பேசியுள்ள இவர், "எவ்வளவு தான் நாம் பெஸ்டாக கொடுத்தாலும், ஆண்கள் தான் அதிகம் மதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு இரண்டாம் பச்சன் தான் கிடைக்கிறது என தெரிவித்துள்ளார்". இது போன்ற சில காரணங்களால் தான் விஜய் டிவியில் இருந்து பாவனா விலகியதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
ஜோதிகாவின் 'சைத்தான்' பட நிகழ்ச்சிக்கு ஸ்டைலிஷாக வந்த சூர்யா! பாலிவுட் ஹீரோஸ் கூட பக்கத்துல நிக்க முடியாது!
பின்னர் தன்னுடைய பர்சனல் குறித்து சில விஷயங்களை மிகவும் மனம் நொந்து பேசியுள்ளார். தன்னை பார்க்கும் பலர், ஏன் இதுவரை குழந்தை இல்லை என்பதை தான் கேட்கிறார்கள். இதுபோன்ற கேள்விகள் அதை கேட்பவருக்கு எவ்வளவு வலியை கொடுக்கும் என்பதை கூட நினைப்பது இல்லை. இது போன்ற கேள்விகளை கேட்டாலே கடுப்பாக இருக்கிறது. இவர்களை பார்த்து என்னுடைய பர்சனாலில் தலையிட நீங்கள் யார் என கேட்க தோன்றும் என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.