தமிழ் சினிமாவில், 100 கோடிக்கு சம்பளம் வாங்கும் உச்ச நடிகராக இருக்கும் விஜய்... அரசியலுக்காக எடுத்துள்ள முடிவு தான் இவர் மீதான மதிப்பையும், மரியாதையையும் கூட்டி உள்ளது. மக்கள் பணி செய்ய வந்து விட்டால்... படம் நடிப்பதை விட்டு தன்னுடைய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டபோது மீண்டும் ஒரு முறை உரைக்க சொன்னார்.
விஜய் தற்போது புதுவையில் உள்ளதால்... வீடியோ கான்ஃபரென்ஸ் மூலம் தன்னுடைய கருத்தை உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொண்டார். பொதுமக்கள் கோவப்பட்டால் கூட அதனை புன் சிரிப்பு மூலம் தான் அவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்ய வேண்டும். கடைக்கோடி மக்களுக்கும் கட்சியை தெரியப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என... உத்வேகப்படுத்தியுள்ளார். எனவே சினிமாவை மிஞ்சும் அரசியலாக தளபதியின் அரசியல் இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
இதற்காக, விஜயகாந்தின் 'கேப்டன்' தொலைக்காட்சியை கைப்பற்ற விஜய் அவருடைய குடும்பத்துடன் காதும்... காதும்... வைத்தது போல் டீல் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. புதிய சேனலை தொடங்க வேண்டுமென்றால் அதற்கான நடைமுறைகள் எக்கச்சக்கமாக இருப்பதால், ஏற்கனவே செயல்பட்டு வரும் டிவியை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.