திருமணம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டமாகும். திருமணம் நம் வாழ்க்கைக்கு ஒரு புதிய பாதை மற்றும் திசையை வழங்குகிறது. திருமணம் புதிய சமூக உறவுகளை உருவாக்குகிறது. இது நம் வாழ்வின் மகிழ்ச்சி மற்றும் துக்கங்களின் மூலம் நம்முடன் செல்கிறது. ஆனால் பல சமயங்களில் திருமணத்தில் பல வகையான தடைகளும் பிரச்சனைகளும் எழுகின்றன.
சில திருமணங்கள் முறிந்து விடும் அல்லது சரியான உறவு கிடைக்காது. அத்தகைய சூழ்நிலையில் வாஸ்து சாஸ்திரமும் நமக்கு உதவுகிறது. திருமணம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க வாஸ்து சாஸ்திரத்தில் பல தீர்வுகள் உள்ளன. இப்போது அதை பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..
திருமணமாகாத ஆண்கள் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலும், பெண்கள் வடமேற்கு திசையிலும் தூங்கக்கூடாது. அதுபோல தூங்கும்போது உங்கள் பாதங்கள் வடக்கு நோக்கியும், தெற்கு திசையிலும் இருக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
திருமணமான ஆண், பெண் கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது. வாஸ்து படி, இந்த நிற ஆடைகள் உங்கள் உறவில் பாதகமான விளைவுகளை உருவாக்குகின்றன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
திருமணமான ஆண் அல்லது பெண் அறையில் ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் இருக்கக்கூடாது. வாஸ்து படி, இது உங்கள் திருமணத்திலும் மனதிலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
தாம்பத்தியத்தில் பிரச்சனைகள் உள்ளவர்கள், வீட்டில் வாழை செடியை நட்டு, தினமும் வழிபடுங்கள். விஷ்ணு வாழையில் வாசம் செய்வதால் திருமணம் தொடர்பான பிரச்சனைகளை உடனே தீர்க்கும்.