முதல் முறையாக, வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவிடம் அவருடைய சகோதரர் ஸ்ரீஹரி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, யாரும் எதிர்பாராத நச் பதில் கொடுத்துள்ளார்.
ஜோவிகா பிறந்த கையோடு ஆகாஷுக்கும், வனிதா விஜயகுமாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்து வரை சென்றது. தன்னுடைய முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற வனிதா, ஆனந்த் ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனந்த் ராஜன் மூலம் வனிதா... ஜெயனித்தா என்கிற மூன்றாவது பெண் குழந்தைக்கு தாயானார் என்பது அனைவரும் அறிந்ததே. பின்னர் சில வருடங்களில் ஆனந்திடம் இருந்தும் விவாகரத்து பெற்றார்.
Jovika
ஜோவிகாவுக்கு படிப்பு மீது ஆர்வம் இல்லாததால், தற்போது நடிப்பு மற்றும் திரையுலக பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய ஜோவிகா, ஆரம்பத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்தார். பின்னர் டவுன் ஆனதால் 70 நாட்களுக்கு பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
Vanitha son Srihari
வனிதா சமீபத்தில் லைவில் ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்தபோது, ஜோவிகாவிடம் ரசிகர் ஒருவர் உங்கள் அண்ணனான ஸ்ரீஹரியை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்? அவர் உங்களுக்காக திரும்ப வருவாரா? என கேள்வி எழுப்பினார். அதற்கு ஜோவிகா நீங்கள் யாரையாவது உண்மையாக நேசித்தால்... அவர்களை அப்படியே ஃப்ரீயா விட்டு விடுங்கள். அவர்கள் மீண்டும் உங்களிடம் வந்தால். அது உங்களுடையது!வரவில்லை என்றால் அது உங்களுடையது இல்லை! என்று மிகவும் மெச்சூர்டாக பதில் அளித்துள்ளார்.